விற்பனைக்கு வரும் கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியாவுக்குச் சொந்தமான கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணி விற்பனைக்கு வருகிறது.

இந்த அணியை விற்றுவிட ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா மற்றும் அவர்களுடன் சேர்ந்து இதை நடத்தி வரும் மோகித் பர்மன் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

இதை வாங்க ஒரு நிறுவனம் இந்த மூவருடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது.

இந்த அணியின் விலை ரூ. 1,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது ஐபிஎல் சீசன்-3 போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

சீசன்-3 போட்டிகள் முடிந்த பின்னரே அணியி்ன் விற்பனை இருக்கும். எதற்காக இந்த அணியை மூவரும் விற்க முடிவு செய்தனர் என்று தெரியவில்லை.

சீசன் 3 போட்டிகளில் இந்த அணி படுமோசமாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. மொத்தம் விளையாடிய 12 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்த அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆனாலும் இறுதிக் கட்டத்தில் இந்த அணி நன்றாக விளையாட ஆரம்பித்துள்ளது

0 comments: