எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி

கம்ப்யூட்டரில் மாநில மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு வசதியாக தமிழ் உட்பட 14 மொழிகளில் புதிய வசதியை கூகுள் இணைய தளம் தொடங்கியுள்ளது.

இந்த சாப்ட்வேரை பெங்களூரில் உள்ள கூகுள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் வடிவமைத்தது. அதன் மூலம் உலகம் முழுவதும் இந்திய சாப்ட்வேர் ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இதுபற்றி கூகுள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிரான்ஸ்லிட்ரேஷன் ஐஎம்இ என்று இந்த வசதி அழைக்கப்படும். ரோமன் கீபோர்டைப் பயன்படுத்தி 14 மொழிகளில் ஏதாவது ஒன்றில் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டச்சு செய்தால் போதும்.

தேர்வு செய்யும் மொழியில் அந்த வார்த்தை பதிவாகும். தட்டச்சு செய்யப்படும்

வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாக கொண்டு அதன் மூல மொழிக்கு இந்த சாப்ட்வேர் தானாக மாற்றிக் காட்டும். உதாரணமாக, ஆங்கிலத்தில் கே&ஏ&எம்&ஏ&எல் என அடித்தால் தமிழில் கமல் என வரும்.

இதுபோல் தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கிரீக், பார்சி, பெங்காலி, அரேபிக் ஆகிய 14 மொழிகளில் இந்த சேவையைப் பெறலாம். இதற்கான சாப்ட்வேரை கூகுள்

இணைய தளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியமில்லை.

ஆப்லைன் முறையிலும் உபயோகிக்க முடியும் என்பதுதான் சாப்ட்வேரின் முக்கிய சிறப்பம்சம்.

9 வயது சிறுமி குழந்தை பெற்றாள்

ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன.

அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் நேற்று முன்தினம் குழந்தை பெற்றாள்.

சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன.
சாங்சன் நகரில் உள்ள மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

தாயும்(!) சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதுகுறித்து சட்ட உதவியை சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.
இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகளில் 11 வயதுக்கு கீழ் சிறுமி எவரும் குழந்தை பெற்றதாக இதற்கு முன் தகவல் இல்லை. எனவே, சீன சிறுமி குழந்தை பெற்றதுதான் முதல்முறை.

மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்ற சம்பவம் 1939ம் ஆண்டில் பெரு நாட்டில் நடந்தது. 5 வயது சிறுமி அப்போது குழந்தை பெற்றாள். 2006ல் அதே நாட்டின் 8 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

உலகம் முழுவதும் 9 வயதில் 5 சிறுமிகளும், 10 வயதில் 9 சிறுமிகளும், 11 வயதில் 8 சிறுமிகளும் குழந்தை பெற்ற சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன.

சிங்கப்பூரில் கோலாகலம் !!

சிங்கப்பூரில் இன்று கோலாகலமாக தை பூசம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தது இதில் அன்று நள்ளிரவு முதல் பால்காவடி எடுத்து பக்கதர்கள் தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் இதில் மலேசியா இந்தோனேசியா பக்தர்கள்ஆளாக கலந்து கொண்டு இவ் விழாவினை சிறப்பித்தனர்.

விஐடியில் கமல்-ஸ்னேகா

வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ரிவேரா 2010 கலை விழாவில் நடிகர் கமல்ஹாஸன் மற்றும் ஸ்னேகா பங்கேற்கிறார்கள்.

வி.ஐ.டி.யில் இன்று சனிக்கிழமை ரிவேரா 2010 கலைவிழா தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

இந்த ஆண்டு சர்வதேச அளவிலான ரிவேரா விழாவாக நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு காட்பாடி காந்திநகர் சில்க்மில் பகுதியில் இருந்து வி.ஐ.டி. வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை வெளிபடுத்தும் வகையில் கிரீன் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றார்கள்.

காலை 9 மணிக்கு வி.ஐ.டி. வளாகத்தில் ரிவேரா-2010 கலைவிழாவை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து வி.ஐ.டி.யில் உள்ள அரங்கங்களில் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு விதமான கலைதிறன் போட்டிகளும், வெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கங்களில் 20 கிரிக்கெட் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடக்கின்றன.

இன்று மாலை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. இதில் நடிகை சினேகா கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அனுக்ஷா பங்கேற்று பாடுகிறார்.

31ம் தேதி மாலை ஆங்கில ராக் இசைப்புகழ் மதர்ஜேன், பாலிவுட் பாடகர் ஷான், சிங்கபூர் புகழ் பயர் ப்ளயலஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 1ம் தேதி பிரிஸ்க் பேக்கூர் என்ற நடன நிகழ்ச்சி முன்னாள் இந்திய உலக அழகி பார்வதி ஓமன குட்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஸ்டைல் செக் எனும் அழகன்- அழகி போட்டி நடக்கிறது.

2ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் கமலஹாசன் பரிசுகளை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வி.ஐ.டி. மாணவர்கள் என 18 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

ரஹ்மான் இசையில் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டுப் பாடல்

கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல் வருமாறு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!


இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரு நிமிடம் பேசினால் ரூ.1.50 லட்சம் கட்டணம்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

லான்ஸ்டவுண் பார்ட்னர்ஸ் என்ற லண்டன் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவதற்காக இந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.


இந்தக் கட்டணம் உண்மைதானா என்ற கேள்விக்கு டோனியின் பேச்சாளர் பதில் கூறவில்லை. ஆனால் உலக அளவில் சிறந்த சொற்பொழிவாளராக டோனி திகழ்கிறார் என பெரும் சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்.

அவரது கட்டுரைகளுக்காக அவது புத்தகத்தை வெளியிடும் நிறுவனம் 46 லட்சம் பவுண்டுகள் தந்துள்ளது என்றார்.
அமெரிக்க வங்கி ஜேபி மார்கன் மற்றும் ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் எனும் இரண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக டோனி இருக்கிறார். ஜேபி மார்கன் ஆண்டுக்கு 20 லட்சம் பவுண்டுகள் வழங்குகிறது.

ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் 5 லட்சம் பவுண்டு வழங்குகிறது. இதைத் தவிர அவருக்கு ஆண்டுக்கு 63,000 பவுண்டுகள் ஓய்வூதியமும் கிடைக்கிறது.
ஸ்பெயின் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்த்திய 90 நிமிட சொற்பொழிவுக்காக 1,80,000 பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இதுவரை ஒரு கோடி பவுண்டுகள் டோனி பிளேர் சம்பாதித்திருக்கிறார் என கணக்கிட்டுள்ளனர்.

நாய் பயிற்சிக்கு இஸ்ரேல் தொழில்நுட்பம்

பிசிஎல் செக்யூர் பிரமிசஸ் நிறுவனம், இஸ்ரேலின் டயக்னோஸ் இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து மோப்ப நாய்களுக்கான பயிற்சி மையம் தொடங்கி உள்ளது.


நாட்டின் முதல் தனியார் பயிற்சி மையமான இதில், வெடிகுண்டுகள் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட மோப்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ÔÔதீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், நட்சத்திர ஓட்டல்களுக்கு இத்தகைய பயிற்சி பெற்ற நாய்கள் தேவை அதிகரித்து வருகிறதுÕÕ என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஆண்களைவிட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்

ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படுவதாக இங்கிலாந்து நிபுணர் தெரிவித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த லாப்பரோ யுனிவர்சிட்டியின் உறக்க ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜிம் ஹார்ன். தூக்கம் குறித்து அவர் கூறியதாவது:


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான் தூக்கம். சோர்வடைந்த மூளைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதுதான் தூக்கத்தின் முக்கிய பணி. மூளையின் ஒரு பகுதி கார்டெக்ஸ். இது நினைவாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகிய பணிகளை செய்கிறது.

ஆழ்ந்த தூக்கத்தின்போது, இது வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு பகல் நேர இயக்கத்தை மறுஆய்வு செய்கிறது. எனவேதான், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு இரவில் அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது.
பெண்களின் மூளை ஆண்களின் மூளையிலிருந்து மாறுபட்டது. குழந்தைகள், கணவன் என குடும்ப பொறுப்பு மட்டுமல்லாது, அலுவலக பொறுப்புகளையும் பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது. எனவே,

ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது. சராசரியாக 20 நிமிடமாவது பெண்கள் கூடுதலாக தூங்க வேண்டும்.
நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஆண்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுடைய மூளை மிகவும் சோர்வடைகிறது.

அவர்களுக்கும் சராசரி ஆண்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்றார்.

ஆஸி. மாடல் அழகி கற்பழித்துக் கொலை

சிட்னியைச் சேர்ந்த பால் ராஜேந்திரன் என்பவர் மாடல் அழகியை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

மைஸ்பேஸ் இணையதளத்தின் மூலம் ஜேம்ஸ் கார்ட்டர் என்ற பெயரில், அந்த மாடல் அழகியை தனது வலையில் விழ வைத்தார் பால் ராஜேந்திரன். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 வயதான அந்த அழகியை தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து கற்பழித்துக் கொலை செய்ததாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு முன்பு அந்த அழகிக்கு ராஜேந்திரன் அனுப்பிய இ மெயில்களில், தான் லா பெர்லா என்ற உள்ளாடை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அதன் விளம்பரங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி தனது வலையில் அவரை விழ வைத்தாராம்.

இந்த வழக்கை விசாரித்த டவுனிங் சென்டர் மாவட்ட கோர்ட் ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

தீர்ப்பைக் கேட்டதும் பால் ராஜேந்திரன் கதறி அழுதார். பின்னர் அவருடைய வக்கீல், ராஜேந்திரனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நீதிபதி டெபோரா பெயன் நிராகரித்து விட்டார்.

ஏப்ரல் 15ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று தண்டனை விவரம் வெளியிடப்படும்.

சானியா திருமணம் ரத்து

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தனது குடும்ப நண்பர் சோரப்புடன் நடக்கவிருந்த திருமணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சானியா குடும்பத்தாரும், அதே பகுதியை சேர்ந்த சோரப் குடும்பத்தாரும் பல ஆண்டுகளாக பழகி வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி, இரு வீட்டாரின் ஒப்புதலுடன் சானியா & சோரப் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விமரிசையாக நடந்தது.
பி.காம் பட்டதாரியான சோரப், தற்போது இங்கிலாந்தில் எம்பிஏ படித்து வருகிறார். ‘படிப்பு முடிந்தவுடன் திருமணம், சானியா தொடர்ந்து டென்னிஸ் ஆட தடையில்லை’ என்று அவர் அறிவித்திருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு விளையாட மாட்டேன் என சமீபத்தில் சானியாவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சோரப்புடனான திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சானியா திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எங்களுக்குள் பல விஷயங்கள் ஒத்துப்போகவில்லை.

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். சோரப்புக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்’ என்றார்.
சானியாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து பத்திரிகையாளர்களுக்கு நேற்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

1.38 கோடி ரூபாயில் ஷாருக் மெழுகு சிலை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானின் முழு உருவ மெழுகுச் சிலையை ரூ.1.38 கோடி செலவில் லண்டன் அருங்காட்சியகத்தில் அமைத்துள்ளனர்.
லண்டனில் மாடேம் டஸ்சாட்ஸ் அருங்காட்சியகம் உள்ளது.


அங்கு சர்வதேச பிரபலங்களின் அச்சு அசலான மெழுகுச் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம். சில தினங்கள் முன்பு அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செலி இருவரும் அருகருகே நிற்பது போன்ற மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.


பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ஷாரூக் கானின் முழு உருவ மெழுகுச் சிலை நேற்று திறக்கப்பட்டது. அதை ரூ.1.38 கோடி செலவில் அமைத்துள்ளனர். அமெரிக்க பயணத்தின் போது விமான நிலையத்தில் ஷாரூக் கானிடம் பாதுகாப்பு கெடுபிடிகள் நடத்தப்பட்டு, பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.

எனினும், அமெரிக்கா, லண்டனில் தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், அங்கு தொடர்ந்து பயணம் செய்வேன் என்று ஷாரூக் கான் சமீபத்தில் கூறியிருந்தார். பாலிவுட் திரையுலகில் அவரது அந்தஸ்தை உலகளவில் வெளிப்படுத்தும் விதமாக லண்டனில் மெழுகுச் சிலையாக நிற்கும் விஐபிக்கள் வரிசையில் ஷாரூக் இப்போது இடம்பிடித்துள்ளார்.

சாக்லெட் உடை

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உலக சாக்லெட் பொழுதுபோக்கு கண்காட்சி நடைபெறுகிறது. அதில் சாக்லெட்களால் செய்யப்பட்ட உடை, அணிகலன்களை அணிந்து வலம் வந்து பார்வையாளர்களை கவர்ந்த மாடல்கள்

தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொண்ட போப்

போப்பாண்டவர் 2ம் ஜான் பால், போப்பாக இருந்தபோது தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்ததாக ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பிஷப்பாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பழக்கம் அவரிடம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"Why He's a Saint" என்ற பெயரில் வெளியாகியுள்ள புத்தகத்தில்தான் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. உண்மையான கிறிஸ்துவராக தான் இருக்க வேண்டும் என்பதற்காகவும், உலக பாவங்களுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் வகையிலும் இவ்வாறு அவர் செய்து வந்ததாக இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்சிக்னர் ஸ்லவோமிர் ஓடர் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். போப்பாண்டவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் இவர்.

இந்தக் குழுவின் முன்பு ஆஜராகி போப்பாண்டவர் 2ம் ஜான் பால் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து 114 பேர் அளித்த சாட்சியங்கள் மற்றும் போப்பாண்டவர் குறித்த ஆவணப்படம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த நூலை மான்சிக்னர் எழுதியுள்ளாராம்.

இந்தப் புத்தகத்தை வாடிகன் சிட்டியில் வைத்து வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் மான்சிக்னர் கூறுகையில், தன்னைத் தானே வருத்திக் கொண்ட போப்பாண்டவரின் செயலில் எந்தத் தவறும் இல்லை. உலக பாவங்களுக்காக தன்னைத் தானே வருத்திக் கொண்ட செயல் இது. மேலும் இயேசுநாததர் சிலுவையில் அறைந்தபோது பட்ட துன்பத்தை நினைவு கூரும் விதமாகவும் இவ்வாறு கிறிஸ்தவர்கள் செய்வது இயல்புதான்.

முழுமையான கிறிஸ்துவராக தாங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள இது ஒரு கருவியாகும். அந்த வகையில்தான் போப்பாண்டவரும் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் பலமுறை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு இருப்பார் போப்பாண்டவர் 2ம் ஜான் பால். மேலும், வெறும் தரையிலும் படுத்துத் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது படுக்கையை தானே கலைத்து விட்டு அதில் படுத்துத் தூங்கியது போல காட்டிக் கொள்வார்.

போப்பாண்டவர் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை தங்கள் காதுகளால் கேட்டதாக போலந்திலும் (அவர் பிஷப்பாக இருந்தபோது), வாடிகன் சிட்டியிலும் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் மான்சிக்னர்.

இந்த நூலில், கடந்த 1989ம் ஆண்டு, தனக்கு உடல் நலம் சரியில்லாவிட்டால் போப்பாண்டவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விடுவேன் என்று போப்பாண்டவர் 2ம் ஜான் தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார் மான்சிக்னர்.

பில் கேட்சுக்கு 3 லட்சம் ட்விட்டர் ரசிகர்கள் : 2 நாளில் சாதனை

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இப்பொழுது ட் விட்டர் குழுவில் இணைந்துள்ளார். அவர் சேர்ந்தபின் 2 நாளில் அவரது ட்விட்டர் குழு ரசிகர் களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது.

முதலில் பேஸ் புக்கில் பில் கேட்ஸ் இணைந்திருந்தார். ஆனால் ஏராளமானவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததால் செயலற்ற நிலையில் சென்ற ஆண்டு ஃபேஸ் புக்கில் இருந்து வெளியேறினார். ட்விட்டர் குறுந்தளத்தில் பில் கேட்ஸ் என்ற பெயரில் பலர் கருத்துகளைக் கூற¤வருகின்றனர்.

இதில் பல அவரது கருத்துகளுக்கு எதிரானதாக உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரிஜினல் பில் கேட்ஸே ட்விட்டரில் இணைந்தார்.

இணைந்ததும் அவர் கூறிய கருத்துகள் என்ன?
தன்னுடைய கருத்துகளை தெரிவிக்கும் www.thegatesnotes.com என்ற இணைய தளத்திற்கான இணைப்புகளைத் தந்துள்ளார். கடந்த 2 நாளில் அவரது ட்விட்டர் ரசிகர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரு மணிக்கு 20,000 பேர் வீதம் அவருடைய ட்விட்டர் பிளாக்கில் இணைந்த வண்ணம் உள்ளனர்.


துபாய்-ஐஎம்டி கல்வி நிறுவ‌ன‌ க‌ட்டிட‌ திற‌ப்பு விழா

இந்தியாவின் உய‌ர்த‌ர‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்றான இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவ‌ன‌த்தின் புதிய‌ க‌ட்டிட‌ திற‌ப்பு விழா ஞாயிற்றுக்கிழமை ந‌டைபெற்ற‌து.

க‌ட்டிட‌த்தை துபாய் துணை ஆட்சியாள‌ர் ஷேக் ம‌க்தூம் பின் முஹம்ம‌த் பின் ராஷித் அல் ம‌க்தூம், இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்துறை அமைச்ச‌ர் க‌ம‌ல்நாத், அமீர‌க‌ உய‌ர்க‌ல்வி ம‌ற்றும் அறிவிய‌ல் ஆராய்ச்சித்துறை அமைச்ச‌ர் ஷேக் ந‌ஹ்யான் பின் முபார‌க் அல் ந‌ஹ்யான் ஆகியோர் திற‌ந்து வைத்த‌ன‌ர்.

இப்புதிய‌ க‌ட்டிட‌ம் 225,000 ச‌துர‌ அடியில் துபாய் ச‌ர்வ‌தேச‌ க‌ல்வி ந‌க‌ரில் அமைய‌ப்பெற்றுள்ள‌து. இந்தியாவின் உய‌ர்த‌ர‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்றான‌ இந்நிறுவ‌ன‌ம் அமீர‌க‌த்தில் உள்ள‌ மாணாக்க‌ர்க‌ளை க‌வ‌ர்ந்து வ‌ருகிற‌து.

விழாவில் டாக்ட‌ர் ப‌ர்ஹ‌த் ராட், டியூக் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ டீன் பிளேர் ஹெச். ஷெப்ப‌ர்டு உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.