9 வயது சிறுமி குழந்தை பெற்றாள்

ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன.

அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் நேற்று முன்தினம் குழந்தை பெற்றாள்.

சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன.
சாங்சன் நகரில் உள்ள மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

தாயும்(!) சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதுகுறித்து சட்ட உதவியை சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.
இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகளில் 11 வயதுக்கு கீழ் சிறுமி எவரும் குழந்தை பெற்றதாக இதற்கு முன் தகவல் இல்லை. எனவே, சீன சிறுமி குழந்தை பெற்றதுதான் முதல்முறை.

மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்ற சம்பவம் 1939ம் ஆண்டில் பெரு நாட்டில் நடந்தது. 5 வயது சிறுமி அப்போது குழந்தை பெற்றாள். 2006ல் அதே நாட்டின் 8 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

உலகம் முழுவதும் 9 வயதில் 5 சிறுமிகளும், 10 வயதில் 9 சிறுமிகளும், 11 வயதில் 8 சிறுமிகளும் குழந்தை பெற்ற சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன.

0 comments: