வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கேபிள் டி.வி.யில் ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பியதால், கேபிள் டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஒளிபரப்பு தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் கேபிள் டிவிகளில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், ஈரோடு, பவானி, கோபி சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள திரைப்பட சி.டி. கடைகள் மற்றும் கேபிள் ஒளிபரப்பு மையங்களில் போலீசார் நேற்று முன்தினம் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பெரும்பாலான சி.டி. கடைகள் பூட்டியிருந்ததால் யாரும் சிக்கவில்லை.


கேபிள் ஒளிபரப்பு நிலையங்களில் மேற்கொண்ட சோதனையில் பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையம் சக்தி கேபிள் நெட்வொர்க் மையத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வேட்டைக்காரன் படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேபிள் உரிமையாளர் யுவராஜ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அங்கிருந்த ஒளிபரப்பு சாதனங்கள், கம்ப்யூட்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட புதுப்பட சிடிகளை பறிமுதல் செய்தனர்.


இது குறித்து எஸ்.பி.ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘கேபிள் சேனல் ஒளிபரப்புகளை கண்காணித்து வருகிறோம். உரிமம் இல்லாத புதுப்படங்களை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுப்போம். கேபிள் டிவி மற்றும் சி.டி. கடைகளில், உரிமம் இல்லாமல் புதுப்பட சி.டி.கள் வைத்திருந்தால் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

0 comments: