நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம்

புதிய ஆண்டு பிறந்ததையொட்டி, நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது. ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.சென்னை நகரில் புத்தாண்டை யொட்டி, நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை, தேவாலயங்கள் என அனைத்து முக்கிய இடங்களும் களை கட்டி இருந்தன. பெரிய ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
சென்னை நகரில் புத்தாண்டை யொட்டி, நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை, தேவாலயங்கள் என அனைத்து முக்கிய இடங்களும் களை கட்டி இருந்தன. பெரிய ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
நேற்று சந்திர கிரகணம் என்பதால் இரவு 10 மணி அளவில் கோவில்களில் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்ததும், கோவில்களில் பரிகார பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்' என்று வேண்டி சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

0 comments: