பொங்கல் நாளன்று நெல்லை மாவட்டத்தில் ரூ. 3 கோடி மது விற்பனை

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் நாளான்று டாஸ்மாக் கடைகளில் ரூ. 3.1 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.36 லட்சம் அதிகம் ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் 223 டாஸ்மாக் மதுகடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 49 கடைகள் மாநகராட்சி பகுதியிலும், 174 கடைகள் மற்ற பகுதிகளிலும் இயங்கி வருகின்றன.


நெல்லை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சராசரியாக நாளொன்றுக்கு 1 கோடி் ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாகிறது. விழாக்காலங்களில் விற்பனை கூடுதலாகி வருகிறது.


கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரூ.3 கோடியே 34 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்னையானது. இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ரூ.3 கோடியே 1 லட்சத்து 5,800க்கு விற்பனையாகி உள்ளது.


கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஓப்பிடும்போது இந்த ஆண்டு ரூ.36 லட்சம் அதிகமாகும். இதன் மூலம் 13 சதவீதம் விற்பனை

0 comments: