உலக காதலர்களை மயக்கும் ஓசூர் ரோஜா

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 4 கோடி ரோஜா மலர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம், கடல் மட்டத்தை விட 1500 அடி உயரத்தில் உள்ளது.

எல்லா மாதங்களிலும் சீரான தட்பவெப்பம் நிலவுவதால் இங்கு காய்கறிகள், ரோஜா மலர்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3125 ஏக்கர் நிலப்பரப்பில் மலர் சாகுபடி நடக்கிறது.

இதில், 700 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை குடில் அமைத்து மலர் உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், ஹாலந்து, போலந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலே சியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

0 comments: