ரூ.1,900க்கு கம்ப்யூட்டர் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

கிராம மக்களுக்கு தவணை முறையில்,1900 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் திட்டத்தை பி.எஸ்.என்.எல்., துவக்கி உள்ளது. பி.எஸ்.என்.எல்., சேவை பற்றி தெரிந்து கொள்ளவும், சலுகை விலையில் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கி ஏராளமான திட்டங்கள் பற்றி அறியவும் சிவகாசியில் இரண்டு நாட்கள் 'மெகா மேளா' நடத்தப்பட்டது.

கிராம எக்ஸ்சேஞ்சுகள் மூலம் நோவாநெட் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. பராமரிப்பு தேவையில்லை, இரண்டாண்டு உத்தரவாதம், சிக்கலற்ற மல்டி மீடியா, வைரசிலிருந்து முழுமையான பாதுகாப்பு, வாழ்நாள் முழுவதற்கும் மென்பொருள் உத்தரவாதம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மானிட்டர், கீபோர்டு, மவுஸ் வாடிக்கையாளரிடம் இருக்கும்.


மெமரி கன்ட்ரோல் பி.எஸ்.என்.எல்., வசம் இருக்கும். ஐந்து ஆண்டு உத்தரவாதம் உள்ளது. இதன் விலை 1,900 ரூபாய். மாதாந்திர கட்டணங்கள் ரூ.274, ரூ.325 க்கு உள்ளன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு 2,550 ரூபாய் செலுத்தி புதிய கம்ப்யூட்டர் பெறலாம்.


மாதம் ரூ.300 வீதம், 60 மாதங்களுக்கும், ரூ.455 வீதம் 36 மாதங்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் திட்டங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு கிராமப்புற டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளை தொடர்பு கொள்ளலாம்.

0 comments: