சென்னை சென்டிரல்-நெல்லை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது

சென்னை: பயணிகளின் வசதிக்காகவும், கூட்டநெரிசலை குறைப்பதற்காகவும் வரும் 17-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு ரயில் (வ.எண். 06013) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இதேபோன்று வரும் 18-ம் தேதி முதல் அடுத்த மாதம் 16-ம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (06014) இயக்கப்படுகிறது. இச்சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இது சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம் , சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

0 comments: