பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்து அபாரம்


பத்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பான்மையாக எட்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்ற எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து அபார சாதனை படைத்தார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் மூலம் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 761 மாணவர்கள், நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 519 மாணவியர் என, எட்டு லட்சத்து 44 ஆயிரத்து 280 பேர், மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 145 பேர், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,674 பேர், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை 1,548 பேர் எழுதினர். இதன் முடிவுகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி நேற்று காலை வெளியிட்டார். 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.9 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்களில் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 764 பேரும், மாணவியரில் மூன்று லட்சத்து 68 ஆயிரத்து 940 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 79.4 சதவீத தேர்ச்சியும், மாணவியர் 85.5. சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


வழக்கம்போல, மாணவியர் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளனர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வில் 88.2 சதவீதம் பேரும், மெட்ரிக் தேர்வில் 94.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் வித்யாலயா மெட்ரிக்., பள்ளி மாணவி பவித்ரா 495 மார்க் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இந்த தேர்விலும் மாணவர்களை விட, மாணவியர் 3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.2 சதவீதம் பேரும், மாணவியர் 96.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலோ இந்தியன் தேர்வில் 96.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மாநில பாடத்திட்டத்தில் நெல்லை மாவட்ட மாணவி முதலிடமும், நீலகிரி, கரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இரண்டாம் இடமும், மூன்றாம் இடத்தை பத்து மாணவர்களும் பிடித்துள்ளனர். 15 மாணவர்களில் நான்கு மாணவர்கள் தவிர, மற்ற 11 மாணவர்களும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மாநில ரேங்க்கில், புதுச்சேரிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் தலா ஒரு இடத்தை பிடித்துள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த 15 மாணவர்களில் ஜாஸ்மின் தவிர, மற்ற 14 மாணவர்களும், அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சாதிக்க பிரபலமான பள்ளி தேவையில்லை: நிரூபித்தார் மாநகராட்சி பள்ளி மாணவி: பிரபலமான பள்ளியில் படித்தால் தான் சாதிக்க முடியும்; அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை கருத்தை, நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்த்தெறிந்து, மாபெரும் சாதனை படைத்துள்ளார். தனியார் பள்ளிகள் மீது, பொதுமக்களுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பள்ளிகளில் மட்டுமே, குறிப்பாக மிகப்பெரிய பள்ளிகளில் மட்டுமே, தரமான கல்வி வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் தான், எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்ற கருத்து, பொது மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால், அவரவர் வசதிகேற்ப தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் தரமான கல்வியை வழங்கினாலும், மக்களிடமுள்ள மோகத்தை பயன்படுத்தி, காசு பார்க்கும் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.


நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவிலான ரேங்க்குகளையும், பாட வாரியான ரேங்க்குகளையும், அதிகம் பெற்றவர்கள் கிராமப்புற மாணவர்கள் தான். நகர்ப்புறங்களிலுள்ள மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பெரிய பள்ளி என்று படையெடுப்பவர்களின் கண்களை திறக்கும் வகையில், சாதிப்பதற்கு பள்ளி முக்கியமல்ல; உழைப்பு தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார், நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், இவர் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


பெரிய தனியார் பள்ளிகளிலுள்ள கட்டமைப்பு வசதிகள், உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்கள், பல்வேறு வகையான கற்பிப்பு முறைகள் ஆகியவை மாநகராட்சி பள்ளிகளில் இருக்குமென கூற முடியாது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஓரளவுக்கு தான் வசதிகள் இருக்கும். முக்கியமாக, படிப்பில் சுமாரான மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள் அட்மிஷன் கொடுப்பதில்லை. மாறாக, மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அட்மிஷன் கொடுத்து, அவர்கள் சாதனையை, தங்கள் சாதனையாக பள்ளிகள் பறைசாற்றி கொள்கின்றன. இதற்கு மத்தியில், சாதாரண பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும், அதற்கு ஈடுபாடும், முழுமையான உழைப்பும் மட்டுமே தேவை என்பதை எடுத்து காட்டியுள்ளார் ஜாஸ்மின்.


மிகவும் ஏழ்மை நிலையில் அபார சாதனை: தந்தை பெருமிதம்: மிகவும் ஏழ்மை நிலையில், மாநில அளவில் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாநில முதல் ரேங்க் பெற்ற மாணவியின் தந்தை தோவூது கூறினார். சாதனை மாணவியின் தந்தை தோவூது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகளின் சாதனை குறித்து தோவூது கூறியதாவது: நான் மோட்டார் சைக்கிளில் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். விற்பனையை பொறுத்துதான் லாபம் ஏதாவது கிடைக்கும். குறைந்தது மாதத்திற்கு ஏழு அல்லது எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் மாநில அளவில் முதலாவது ரேங்க் பெற்றார் என்ற தகவல் கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.


ஒரு தந்தையாக அவளது கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஜாஸ்மின் வேறு பள்ளியில் படித்தார். 6ம் வகுப்பு முதல் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். ஆரம்பம் முதலே பள்ளியில் நன்கு படித்து முதல் ரேங்க் பெறுவார். தொடர்ந்து நன்கு படித்து, தற்போது மாநில அளவில் முதலாவது ரேங்க்கை பெற்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் மிகவும் உறுதுணையாகவும், ஊக்கமும் அளித்தனர். எனவே, தொடர்ந்து இதே பள்ளியிலேயே படிக்க வைப்பேன். வேறு எந்த பள்ளியிலும் சேர்க்க மாட்டேன். எனது மகளின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஊக்கத்தையும் அளிப்பேன். இவ்வாறு சாதனை மாணவியின் தந்தை கூறினார்.

வாகைச்சூடிய சகோதரி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர்.இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி : முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்
ADIRAIDAILYNEWS

தனது மேல்படிப்பு தொடர ............................

பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளி ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்செந்தூர்அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து.
அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
பாடவாரியாகஇவர் பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் -123,
ஆங்கிலம் -92,
மனை இயல் -125,
உளவியல் -172,
எழுத்து மற்றும் செய்முறை தேர்வு - 366. மொத்தம் - 878/1200.
முகவரி: பாத்திமுத்து, பா/ கா . நாகூர் முத்து , 49 பள்ளிமார்தெரு, காயல்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம் ,
மொபைல் எண்: 9698386885

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.

கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.


மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு.

இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

சீர்காழி விவேகானந்தா பள்ளி 99 சதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 171 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 169 பேர் தேர்ச்சி பெற்றனர். சீர்காழி தாலுகா அளவில் இப்பள்ளி மாணவிகள் 3 பேர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இதில் மாணவி ஆர்த்திபிரியங்கா 1165 மதிப்பெண் பெற்று நாகை மாவட்ட அளவில் 3ம் இடம், தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கல்பனா 1164 பெற்று தாலுகா அளவில் 2ம் இடம், சூரியலட்சுமி 1158 மதிப்பெண் பெற்று தாலுகா அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர்.1100 மதிப்பெண்ணுக்கு மேல் 22 மாணவர்கள் பெற்றுள்ளனர். 1000 மதிப்பெண்ணுக்கு மேல் 71 மாணவர்கள் பெற்றுள்ளனர். முதல் வகுப்பில் 169 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் மணிவண்ணன் கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் தாளாளர்கள் ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர்கள் ஜோஸ்வா பிரபாகரசிங், சரோஜா, துணை முதல்வர் ஆபிரஹாம் யோனோக், மேலாளர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

நாகையில் 9 பள்ளிகள் 100 சதவீதம்

நாகை மாவட்டத்தில் ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, 8 மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி என பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நாகை மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் மயிலாடுதுறை கல்வி மாவட்டம் தரங்கம்பாடி (அரசு உதவி பெறும்) தூய தெரசாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீடூர் நசுருல் முஸ்லிம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, வடகரை ஹாஜா சாரா அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பழைய கூடலூர் ஜி.எஸ். கல்யாணசுந்தரம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
நாகை கல்வி மாவட்டத்தில் வேதாரண்யம் புனித அந்தோணியார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, நாகூர் கிரசன்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பட்டுக்கோட்டை மாணவர் பாரதிராஜா மாவட்டத்தில் முதலிடம்

தியானத்தால் லட்சியத்தை அடைந்தேன் என்று பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாரதிராஜா கூறினார்.பட்டுக்கோட்டை பள்ளிகொண்டான் லாரால் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் பாரதிராஜா தமிழில் 193, ஆங்கிலத்தில் 188, இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் தலா 199, உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் தலா 200 என்று மொத்தமாக ஆயிரத்து 179 மதிப்பெண் பெற்று தஞ்சை வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.\

இந்த மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். இவர் பட்டுக்கோட்டை ஆர்.வி நகரில் வசிக்கிறார்.இவரது தந்தை பழனிவேலு வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். தாய் சாரதா காதர்மொய்தீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.தனது சாதனை குறித்து மாணவர் பாரதிராஜா கூறியதாவது:


10ம் வகுப்பில் படைத்த சாதனையை விட பிளஸ் 2 தேர்வில் கூடுதல் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக பெற்றோர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி வந்தேன். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்குவது இல்லை. தினமும் தியானம் செய்து வந்தேன். எனது லட்சியத்தை அடைய தியானம் முழுமையாக உதவியது. எதிர்காலத்தில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


மாணவி பவித்ரா மாவட்டத்தில் 2ம் இடம்: பட்டுக்கோட்டை புனித இசபெல்லா பள்ளியில் படித்தவர் பவித்ரா. இவர் பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் 191, இயற்பியலில் 198, வேதியியலில் 200, உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் 199 என்று மொத்தம் ஆயிரத்து 178 மதிப்பெண் பெற்று தஞ்சை வருவாய் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.


இவரது தாய் சித்ரா பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவரது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். இதனால் பவித்ரா தனது சித்தி விமலாவுடன் வசித்து வருகிறார். பவித்ராவின் சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இமானுவேல்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினார்.


சாதனை குறித்து மாணவி பவித்ரா கூறியதாவது:நான் சிறு வயது முதல் நன்றாக படிப்பேன். எனது தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகல் என்று பார்க்காமல் படித்து வந்ததால் லட்சியத்தை அடைய முடிந்தது. தாய் இறந்த பின்னர் தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோர் எனது படிப்புக்கு முழு ஊக்கம் கொடுத்தனர். தலைமை ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை கொடுத்த ஊக்கம் நான் மாவட்ட அளவில் இடம் பெற உதவியது.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாரை ரோல்மாடலாக கொண்டு ஏழைகளுக்கு சேவை செய்ய உள்ளேன். இதற்காக எதிர்காலத்தில் டாக்டர் படிப்பை தேர்வு செய்து படிக்க இருக்கிறேன். இவ்வாறு மாணவி பவித்ரா கூறினார்.


மாணவி ஜனனி மாவட்டத்தில் 3ம் இடம்: பட்டுக்கோட்டை இசபெல்லா மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி தமிழில் 183, ஆங்கிலத்தில் 192, இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200, கம்ப்யூட்டர் அறிவியலில் 197 என்று மொத்தம் ஆயிரத்து 172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.இவரது தந்தை மதுக்கூர் இந்தியன் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.


தாய் சொர்ணலதா குடும்ப பெண்மணி. ஜனனி 6ம் வகுப்பு முதல் எல்லா தேர்வுகளிலும் முதல் இடத்தை பிடித்துள்ளார். நான் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் டி.வி, போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்தனர். இதனால் நான் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. எனது பெற்றோரின் தியாகம் மாவட்ட அளவில் இடம் பெற முடிந்தது.நான் எதிர்காலத்தில் இன்ஜினியர் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சாதனை படைத்த மாணவி ஜனனியை தலைமை ஆசிரியர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இமானுவேல்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினார்.


மாவட்ட அளவில் மாணவிராகிலாபர்வீன் 3ம் இடம்தஞ்சை ஆக்ஸீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ராகிலாபர்வீன் தமிழில் 191, ஆங்கிலம் 189, இயற்பியல் 195, வேதியியல் 199, கம்ப்யூட்டர் அறிவியல் 198, கணிதம் 200 என்று ஆயிரத்து 172 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றார். இவரது தந்தை முகமது இஸ்மாயில், தாய் பரிதாபேகம்.


நான் பிளஸ் 1 தேர்வில் மாவட்ட அளவில் இடம் பிடித்துள்ளேன். அதே போல் பிளஸ் 2 தேர்வில் இடம் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் சாதனை படைக்க முடிந்தது. எதிர்காலத்தில் பொறியாளர் ஆவதே எனது லட்சியம் என மாணவி ராகிலாபர்வீன் கூறினார்.

பேராவூரணி அரசு மகளிர் பள்ளி சாதனை

நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தஞ்சை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பேராவூரணி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி புவனேஸ்வரி 1,153 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் தஞ்சை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி பவித்ரா 1,057 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவர் சூர்யா 1,052 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வெழுதிய 465 பேரில் 457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் சந்திரசேகரன், பெற் றோர் ஆசிரியர் கழக கோவிந்தராசு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி: பேராவூரணி ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி கவிநயா 1,148 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் ஜெயசீலன் 1,139 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் அருண்குமார் 1,137 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.


ஜெயசீலன், ராதிகா, அருண் குமார் ஆகியோர் கணிதத்தில் 200 மதிப் பெண், கவிநயா, ஜெயசீலன் ஆகியோர் வேதியியலில் 200 மதிப்பெண், மாணவி நிவேதா தமிழில் 191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் கணபதி, ராமு, பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர் கள் பாராட்டினர். திருச் சிற்றம்பலம் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.


வெற்றிப் பெற்ற மாணவர்களை தாளாளர் வேதநாயகி மற்றும் இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது. வெற்றிப் பெற்றவர்களை பள்ளித் தாளாளர் வக்கீல் சாமியப்பன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாராட்டினர். பேராவூரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சதீஷ் 1,017 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் சந்தோஷ்முருகன் 1,007 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் கண்ணதாசன் 987 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.


பெருமகளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவி விஜி 854 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி சித்ரா 823 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் பிரசன்னா 796 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் சண்முகம் பாராட்டி பரிசளித்தார்.தஞ்சை மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

வெற்றி பெற்றோரை கலெக்டர் சண்முகம் பாராட்டினார். தேனா வங்கி பரிசுதஞ்சை தேனா வங்கி சார்பில் கிளை மேலாளர் தமிழ்மணி மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் முதலிடம் பெற்ற பாரதிராஜாவுக்கு ரூபாய் 5 ஆயிரம், 2ம் இடம் பெற்ற பவித்ராவுக்கு ரூபாய் 3 ஆயிரம், 3ம் இடம் பெற்ற ஜனனி மற்றும் ராகிலாபிரவீன் ஆகியோருக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் பரிசு வழங்கினர்.


இந்த ரொக்கப் பரிசை கலெக்டர் சண்முகம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதையடுத்து அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம், 2ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 2 ஆயிரம், 3ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் ஆயிரம் வங்கி சார்பில் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரும் திரளாக கலந்து கொண்டனர்.

தினமும் யோகா செய்தால் பாடம் மனதில் பதியும் சொல்கிறார் வணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி

'பள்ளியில் தினமும் அரைமணி நேரம் யோகாவிற்கு பிறகு தான், வகுப்புகள் தொடங்கும். அந்த 'மெடிடேசன்' தான், படித்த பாடங்களை நினைவில் வைத்து கொள்ள உதவியாக இருந்தது' என, மாநில அளவில் வணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி ஏக்ன பிரியா கூறினார்.சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏக்ன பிரியா. இவர், பிளஸ் 2 தேர்வில் 1,183 மதிப்பெண்கள் பெற்றார். வணிகவியல் பாடப்பிரிவில் 200 மதிப்பெண்கள் பெற்ற அவர், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அவரது மதிப்பெண் விவரம்:பிரெஞ்சு 192, ஆங்கிலம் 192, பொருளியல் 199, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200.இதுகுறித்து அவர் கூறியதாவது:பள்ளிக்கு காலையில் சென்றவுடன், தினமும் அரைமணி நேரம் யோகா பயிற்சி கொடுக்கப்படும்.படித்த பாடங்களை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ள, அப்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருந்தது.

புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்மாவட்டத்தில் 2ம் இடம் பிடித்த மாணவி பேட்டி

''பாடங்களை புரிந்து கொண்டு படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறலாம்'' என்றுபிளஸ் 2 தேர்வில் சென்னை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிபத்மினி தெரிவித்தார்.வேப்பேரி, அகர்வால் வித்யாலயா மேல் நிலைப் பள்ளிமாணவி பத்மினி. பிளஸ் 2 தேர்வில் இவர் ஆயிரத்து 177 மதிப்பெண்கள் பெற்றுமாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்தார்.இவர் தமிழ்-187, ஆங்கிலம்-192, வணிகவியல்-200, கணக்கு பதிவியல்- 200, கணிதம்- 200 மற்றும்பொருளாதாரத்தில்- 198 என மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.இது குறித்து பத்மினிகூறுகையில்,'டியூஷன் வைத்துக் கொள்ளாமல் சுயமாக படித்தாலே அதிகமதிப்பெண்கள் பெறலாம். தினமும் அதிகாலை 4 மணி முதல் படிப்பேன். தேர்வுநேரத் தில் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் படிப்பேன்.பிளஸ் 2 வந்தவுடன் 'டிவி' பார்ப்பதை நிறுத்தி விட்டேன். எனது படிப்பிற்கு ஆசிரியர்களும், பெற்றோரும்பெரும் உதவி செய்தனர். எனது பெற்றோர் அதிகம் படிக்காதவர்கள். எனவே, நான்படிப்பில் சிறந்து விளங்கவேண்டும் என தனி அக்கறை எடுத்துக் கொண்டனர். பாடங் களை புரிந்து கொண்டு படித்தாலே அதிக மதிப் பெண்கள்பெறலாம்,'என்றார்.
மாணவி பத்மினியை பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி மற்றும் ஆசிரியர்கள்வாழ்த்தினர்.

மைக்கேல் ஹசி அதிரடி: பைனலில் ஆஸி., *கடைசி ஓவரில் கோட்டைவிட்டது பாக்.,


"டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் கடைசி ஓவரில் மைக்கேல் ஹசி "சிக்சர் மழை பொழிய, ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி வாய்ப்பை வீணாக பறிகொடுத்த "நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.
வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று செயின்ட்லூசியாவில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் "நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
துவக்கம் தாமதம்:
மழை காரணமாக மைதானத்தின் பெரும்பாலான பகுதி ஈரமாக இருந்ததால், போட்டி துவங்குவதில் அரைமணி நேரம் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
சூப்பர் ஜோடி:
முதல் ஓவரை நானஸ் "மெய்டனாக வீசினார். இதற்கு பின் கம்ரான் அக்மல், சல்மான் பட் இணைந்து பாகிஸ்தானுக்கு அசத்தல் துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி மழை பொழிய, ஆஸ்திரேலிய பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. டெய்ட் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஸ்மித் சுழலில் கம்ரான் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். வாட்சன் வீசிய 9வது ஓவரில் சிக்சர் மற்றும் 2 பவுண்டரி அடித்த கம்ரான், 32 பந்துகளில் அரைசதம் எட்டினார். இது சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் இவரது 5வது அரைசதம். பின் ஜான்சன் பந்தை விரட்டிய கம்ரான்(50), வார்னரின் சூப்பர் "கேட்ச்சில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு கம்ரான்-சல்மான் 82 ரன்கள் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ஸ்மித் சுழலில் சல்மான்(32) சிக்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி(8) ஏமாற்றினார்.
உமர் அரைசதம்:
பின் அண்ணன் கம்ரான் வழியில், அவரது தம்பி உமர் அக்மல் கடைசி கட்டத்தில் கலக்கினார். ஜான்சன் வீசிய 18வது ஓவரில் 3 சிக்சர்கள் விளாசிய இவர், அரைசதம் அடித்தார். லத்திப் 13, ரசாக் 12 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. <உமர்(56) அவுட்டாகாமல் இருந்தார். ஆமர் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. முகமது ஆமர் வேகத்தில் வார்னர் "டக் அவுட்டானார். சிறிது நேரம் அதிரடி காட்டிய வாட்சனும்(16), ஆமர் பந்தில் வீழ்ந்தார். இரண்டு ஐ.பி.எல்., நட்சத்திரங்களும் விரைவில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. ஹாடின்(25) அதிக நேரம் நீடிக்கவில்லை. அப்ரிதி வலையில் கேப்டன் மைக்கேல் கிளார்க்(17) வெளியேற, 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் கேமரான் ஒயிட், டேவிட் ஹசி இணைந்து போராடினர். ஹபீஸ் ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். தொடர்ந்து சுழலில் மிரட்டிய அப்துர் ரஹ்மான், டேவிட் ஹசியை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
"திரில் வெற்றி:
கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. படுமோசமாக பந்துவீசிய சயீத் அஜ்மல், பாகிஸ்தானின் வில்லனாக மாறினார். முதல் பந்தில் ஜான்சன் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் மைக்கேல் ஹசி "சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் "சிக்சருக்கு பறக்க "டென்ஷன் எகிறியது. நான்காவது பந்தில் "பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் இன்னொரு இமாலய சிக்சர் அடித்த மைக்கேல் ஹசி அணிக்கு "திரில் வெற்றி தேடி தந்தார். ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து, "திரில் வெற்றி பெற்றது.
முதல் முறை:
இதன் மூலம் "டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியது. 24 பந்துகளில் 60 ரன்கள்(3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசிய மைக்கேல் ஹசி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நாளை நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஸ்கோர் போர்டு
பாகிஸ்தான்
கம்ரான்(கே)வார்னர்(ப)ஜான்சன் 50(34)
சல்மான்(கே)வார்னர்(ப)ஸ்மித் 32(30)
உமர் அக்மல்-அவுட் இல்லை- 56(35)
அப்ரிதி(கே)ஹாடின்(ப)டேவிட் ஹசி 8(9)
லத்திப்(கே)வார்னர்(ப)நானஸ் 13(6)
ரசாக்-ரன் அவுட்-(ஹாடின்/டெய்ட்) 12(7)
மிஸ்பா-ரன் அவுட்-(டெய்ட்) 0(0)
உதிரிகள் 20
மொத்தம்(20 ஓவரில் 6 விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-82(கம்ரான்), 2-89(சல்மான்), 3-114(அப்ரிதி), 4-145(லத்திப்), 5-189(ரசாக்), 6-191(மிஸ்பா).
பந்துவீச்சு: நானஸ் 4-1-32-1, டெய்ட் 4-0-25-0, ஜான்சன் 4-0-37-1, வாட்சன் 2-0-26-0, ஸ்மித் 2-0-23-1, டேவிட் ஹசி 3-0-24-1, மைக்கேல் கிளார்க் 1-0-13-0.
ஆஸ்திரேலியா
வார்னர்(கே)உமர்(ப) ஆமர் 0(2)
வாட்சன்(கே)ரஹ்மான்(ப)ஆமர் 16(9)
ஹாடின்(ஸ்டம்)கம்ரான்(ப)ரஹ்மான் 25(20)
கிளார்க்(ஸ்டம்)கம்ரான்(ப)அப்ரிதி 17(19)
டேவிட் ஹசி(கே)+(ப)ரஹ்மான் 13(9)
ஒயிட்(கே)ஹபீஸ்(ப)ஆமெர் 43(31)
மைக்கேல் ஹசி-அவுட் இல்லை- 60(24)
ஸ்மித்(ஸ்டம்)கம்ரான்(ப)அஜ்மல் 5(4)
ஜான்சன்-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 13
மொத்தம் (19.5 ஓவரில் 7 விக்.,) 197
விக்கெட் வீழ்ச்சி: 1-1(வார்னர்), 2-26(வாட்சன்), 3-58(ஹாடின்), 4-62(கிளார்க்), 5-105(டேவிட் ஹசி), 6-139(ஒயிட்), 7-144(ஸ்மித்).
பந்துவீச்சு: ஆமர் 4-0-35-3, ரசாக் 2-0-22-0, ரஹ்மான் 4-0-33-2, அஜ்மல் 3.5-0-46-1, அப்ரிதி 4-0-34-1, ஹபீஸ் 2-0-20-0.

பிளஸ் 2 தேர்வில் 85.2 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி : மாணவிகள் அசத்தல்

Front page news and headlines today

ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த ஆண்டைவிட 2.2 சதவீதம் அதிகரித்து, 85.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவர்கள் 81.9 சதவீதம் பேரும், மாணவியர் 88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், முக்கியப் பாடமான கணிதத்தில் கடந்த ஆண்டைவிட 50 சதவீதத்திற்கும் குறைவாக, 'சென்டம்' சரிந்திருப்பது மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 82 ஆயிரத்து 607 மாணவர்கள் எழுதினர். இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 931 பேர்; மாணவியர் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 471 பேர். இதன் முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்களில் 85.2 சதவீத மாணவர்கள் (ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 251பேர்) தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 83 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 2.2. சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.மாணவர்களில் 81.9 சதவீதம் பேரும், மாணவியரில் 88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல், மாணவர்களை விட இந்த ஆண்டும் மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 762 மாணவர்கள், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற்றனர். இது, இந்த ஆண்டு மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 747ஆக அதிகரித்துள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கணிதத் தேர்வு கடினமான முறையில் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதனால், எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் சரியலாம் என்றும், 'சென்டம்' வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.அவர்கள் கூறியதுபோலவே, முக்கிய பாடமான கணிதத்தில், 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 4,060 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு 1,762 பேர் மட்டுமே, 200க்கு 200 பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்திலும், 'சென்டம்' குறைந்துள்ளது. மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, இந்தப் பாடங்களின் மதிப்பெண்கள் முக்கியமாக இருக்கும் நிலையில், 'சென்டம்' கணிசமாக சரிந்திருப்பது, மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மாநில அளவிலான முதலிடம், வழக்கம்போல் இந்த ஆண்டும் தென் மாவட்டத்திற்கு சென்றது.கடந்த ஆண்டு தென்காசி அருகில் உள்ள இலஞ்சியைச் சேர்ந்த ரமேஷ், முதலிடம் பெற்றார். இந்த ஆண்டு, தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா பள்ளி மாணவர் பாண்டியன், 1,187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து ஒரு மாணவர் கூட, 'ஸ்டேட் ரேங்க்'கில் இடம்பெறவில்லை.

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு ; தூத்துக்குடி மாணவன் முதலிடம் ; ‌கலெக்டராவதே இலட்சியம்

மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டராக மாறி மக்களுக்கு தொண்டு ஆற்றுவேன் என முதலிட‌த்தை பிடித்த மாணவன் பாண்டியன் கூறியுள்ளார். ரிசல்ட்டுக்கு பின்னர் மாணவ, மாணவிகளின் வருங்கால, கனவு எண்ணத்திற்கு விளக்கம் தரும் கல்வியாளர்களின் நேரடி ‌ஒளிபரப்பு தினமலர் இணையதளம் ஏற்பாடு செய்திருந்தது. லைவ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். 1186 மார்க்குகள் பெற்று 3 மாணவர்கள் 2 வது இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தியா ( விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி பண்டமங்கலம் நாமக்கல் ) காருண்யா ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி) , தினேஷ் ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி) ஆகிய 3 பேர் 2 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.



3 வது இடத்தை பிடித்தவர்கள் யார் ? யார் ? :



3 வது இடத்தை 5 மாணவ, மாணவிகள் 3 வது இடத்தை பிடித்துள்ளனர் . பிரவக்சனா ( சி.வி.பி.,ஏ.சி.ஆர்.ஆர்.,மெட்., பள்ளி ) , மனோசித்ரா ( குறிஞ்சி மெட்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) அபிநயா( பி.வி.பி.,மெட்ரிக்பள்ளி திண்டல் ஈரோடு ) , செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ( பிரின்ஸ் மெட்., மேல் நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு ) , அரியலூர் அண்டோ நசீரின் ( அரசு நகர் மேல்நிலைப்பள்ளி மெட்., மேல்நிலைப்பள்ளி அரியலூர் ) ஆகியோர் 1185 மார்க்குகள் பெற்று 5 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. 6 ,லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 85 .2 சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முடிவுகள் வெளியானதும் மாணவ, மாணவிகள் தத்தம் பள்ளிகளில் குவிந்திருந்தனர்.



மணப்பாடம் செய்வது தனக்கு கைவந்த கலை முதலிடம் பிடித்த மாணவன் பளீச் பேட்டி : பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவன் பாண்டியனின் தந்தை ராஜூ., இவர் நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தாயார் சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியை. அண்ணா பல்ககலைக்கழகத்தில் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார் சகோதரர் ரவி சங்கர். மாணவன் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி நாட்டுக்காக பணி புரிய வேண்டும் என்பதை லட்சியம். இந்த வெற்றி தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். தன்னை எப்போதும் பெற்றோர்கள் படி என்று நிர்பந்திப்பதில்லை , படிப்பு மட்டும் இல்லாமல் பொழுதுபோக்குக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்குவேன். மணப்பாடம் செய்வது தனக்கு கைவந்த கலை என்றும் அப்படி படித்தது தேர்வில் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார். பாண்டியனின் பாடவாரியான மதிப்பெண்கள் பின்வருமாறு : தமிழ் : 194, ஆங்கிலம் : 193, கணிதம் : 200, இயற்பியல் : 200, வேதியியல் : 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் : 200.



இதில் மாணவர்கள் , மாணவிகள் . பள்ளிகள் மூலமும், இணையதளம் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்ட தினமலர் நாளிதழ் தேர்தல் முடிவுகளை தினமலர் இணையதளம் கல்விமலர்.காம் மூலம் உடனடியாக வெளியிட்டுள்ளது. தினமலர் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு ரிசல்ட் வெளியான உடன் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ் ., மற்றும் இ மெயில் மூலமும் பறந்தன. கடந்த தேர்வை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.



பாட வாரியாக முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகள் : பிளஸ் 2 தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, தமிழில் 197 மதி்பபெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.வெங்கடேஷ் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.




தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், வேதியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி, உத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தினேஷ், உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தக்கலை, மடத்துவிளை செயின்ட் லாரன்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.ஜெனிஷா, தாவர இயல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.



குழித்துறை, மார்த்தாண்டம் கிறிஸ்துவ ராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனிதா எட்வின், விலங்கியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். கரூர் எம்.பி.எல்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.கார்த்திகா, வரலாற்று பாடத்தில் 199 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.



பொருளாதாரப் பாடத்தில் பாண்‌டிச்சேரி குளூனி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா சாரா குருவில்லா, 200 மதிப்பெற் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். வர்த்தகம் பாட்த்தில் பெரம்பலூர் டி.எஸ்.மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ஜெயலட்சுமி, 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். சிறப்பு தமிழ்ப் பாடத்தில் திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.கீர்த்தி பிரியா 191 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.



கணித பாடத்தில் 1762 பேர் 200க்கு 200 : கணித பாடத்தில் 1762 பேர் 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 4060 ‌பேர் 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு கணிதப் பாடம் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.



உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி: நேரடி ஒளிபரப்பு : உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை முன்னிட்டு , 'தினமலர்' நாளிதழ் தங்கள் வாசகர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை வழங்கியது. இணையதளத்தில், இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. இதில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, சென்னை செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளி நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார், சியோன் பள்ளி நிறுவனங்களின் தாளாளர் விஜயன் ஆகியோர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். மாணவர்கள் பலர் தங்களுடைய சந்தேகங்களை போன் மூலம் கேட்டு பயன்பெற்றனர்.

வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'

Top world news stories and headlines detail 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் படுதோல்விக்கு ஐ.பி.எல்., நள்ளிரவு 'பார்ட்டிகளே' காரணம் என கேப்டன் தோனியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். உண்மையில் இந்த 'பார்ட்டிகளில்' அரங்கேறிய சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. விரும்பிய பெண்ணுடன் உற்சாகம், மதுபானத்தில் மிதப்பது, போதை பொருட்களை பயன்படுத்துவது என வீரர்கள் மிகுந்த உல்லாசமாக இருந்துள்ளனர். அதிகாலை 4 மணி வரை ஆட்டம் நீடித்ததால், உடல் அளவில் சோர்ந்து போயுள்ளனர்.


இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடந்தது. இதில் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் நள்ளிரவு 'பார்ட்டிகள்' நடந்தன. முன்னணி வீரர்களும் பங்கேற்று, இரவு நேரத்தை உற்சாகமாக கழித்தனர். 'பேஷன் ÷ஷா', வெளிநாட்டு மாடல்கள், நடனப் பெண்கள் என கவர்ச்சி அம்சங்கள் ஏராளமாக அரங்கேறின. மதுவும் தாராளமாக பரிமாறப்பட்டது. 'இப்பார்ட்டியில்' பங்கேற்க விரும்பும் ரசிகர்களிடம் இருந்து ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. இத்தகைய 'பார்ட்டிகள்' தான் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


அதிகாலை 4 மணி: ஐ.பி.எல்., 'பார்ட்டிகள்' வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டல்களில் தான் நடந்தன. இதனால், 'பார்ட்டிகளை' அவர்களால் தவிர்க்க முடியவில்லை. 'ரூமில்' சும்மா இருந்தால் கூட கீழே போய் 'ஜாலியாக' இருக்க வேண்டியது தானே என கூறுவார்களாம். சரி ஒரு அரைமணி நேரம் பொழுதை கழிக்கலாம் என 'ரூமை' விட்டு வெளியேறும் வீரர்கள், 'பார்ட்டி' மயக்கத்தில் அதிகாலை 4 மணி வரை மூழ்கி விடுவார்களாம்.


முதலில் பேஷன் ஷோ சுமார் 45 நிமிடங்கள் நடக்குமாம். இதில் பங்கேற்ற மாடல்கள், பின் வீரர்களுடன் கலந்து சகஜமாக பேசுவர். இவர்களை தவிர, எதற்கும் 'துணிந்த' சில பெண்களும் கலந்து கொள்வார்கள். இவர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு உல்லாசமாக இருப்பார்களாம். சிகரெட், உயர் ரக மதுபானம், சில நேரங்களில் போதை மருந்துகள் என அனைத்துமே இலவசமாக கிடைக்கும். இந்த 'பார்ட்டியில்' இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் ஆகும். அடுத்து போட்டிகள் இருந்ததால், வீரர்கள் சோர்ந்து போயினர். இதே களைப்புடன் யுவராஜ், காம்பிர், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், பியுஸ் சாவ்லா போன்ற வீரர்கள் உலக கோப்பை தொடருக்கும் சென்றதால், மிகுந்த ஏமாற்றம் அளித்தனர்.