சீர்காழி விவேகானந்தா பள்ளி 99 சதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 171 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 169 பேர் தேர்ச்சி பெற்றனர். சீர்காழி தாலுகா அளவில் இப்பள்ளி மாணவிகள் 3 பேர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இதில் மாணவி ஆர்த்திபிரியங்கா 1165 மதிப்பெண் பெற்று நாகை மாவட்ட அளவில் 3ம் இடம், தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கல்பனா 1164 பெற்று தாலுகா அளவில் 2ம் இடம், சூரியலட்சுமி 1158 மதிப்பெண் பெற்று தாலுகா அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர்.1100 மதிப்பெண்ணுக்கு மேல் 22 மாணவர்கள் பெற்றுள்ளனர். 1000 மதிப்பெண்ணுக்கு மேல் 71 மாணவர்கள் பெற்றுள்ளனர். முதல் வகுப்பில் 169 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் மணிவண்ணன் கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் தாளாளர்கள் ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர்கள் ஜோஸ்வா பிரபாகரசிங், சரோஜா, துணை முதல்வர் ஆபிரஹாம் யோனோக், மேலாளர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 comments: