விவசாயத்துக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வலியுறுத்தல்முற்றுகை நடத்திய விவசாயிகள் 66 பேர் கைது

விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி தஞ்சை மாவட்டத்தில் மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.விவசாயத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் உற்பத்திக்கான திட்டங்களின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், புதிய மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க வேண்டும், பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் தொடர்ச்சியாக முன்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப்


போராட்டம் நடந்தது. தஞ்சையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சாமிநடராஜன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பையன், வைத்தியநாதசாமி, ஆரோக்கியதாஸ் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பட்டுக்கோட்டையில் பொருளாளர் கோவிந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

0 comments: