கழிப்பறையுடன் போலீசாருக்கு குளிரூட்டப்பட்ட நிழற்குடை : மதுரையில் அறிமுகம்

Tamilnadu special news update

இந்தியாவிலேயே முதன்முறையாக, மதுரை நகர் போலீசாருக்கு 3.50 லட்சம் ரூபாய் செலவில், கழிப்பறை வசதியுடன் குளிரூட்டப்பட்ட நிழற்குடை நேற்று திறக்கப்பட்டது. தீயணைப்பு கருவி, முதலுதவிக்கான மருந்துகள் இருப்பதுடன், ரயில், விமான நேரங்கள் மற்றும் மதுரை குறித்த தகவல்களும் இங்கு தெரிவிக்கப்படுகிறது. மதுரை ஆவின் சந்திப்பில், போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியன் திறந்து வைத்தார். உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். 'ஸ்பான்சர்' மூலம் அமைக்கப்பட்ட இந்த நிழற்குடையின் மதிப்பு 3.50 லட்சம் ரூபாய். மின் மற்றும் தண்ணீருக்கான மாத பராமரிப்பு செலவையும் 'ஸ்பான்சர்' ஏற்கின்றனர். பழமையான மதுரை குறித்த படங்கள் மற்றும் போலீஸ் பணி குறித்த படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை நிழற்குடை திறந்திருக்கும். இங்குள்ள போலீசாரிடம் பொதுமக்கள் புகார் கூறினால், வாக்கிடாக்கி மூலம் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிப்பர்.


கமிஷனர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''போக்குவரத்து போலீசார் மட்டுமில்லாமல், அனைத்து பிரிவு போலீசாரும் இதை பயன்படுத்துவர். நான் உட்பட உயர் அதிகாரிகளும் அவ்வப்போது இங்கு 'விசிட்' செய்வோம். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் மையமாக இது செயல்படும்,'' என்றார்.

0 comments: