பட்டுக்கோட்டை ஆர்.வி., நகரில் தொடரும் திருட்டால் மக்கள் பீதி

பட்டுக்கோட்டை ஆர்.வி நகரில் சமீபத்தில் வீடு புகுந்து ஒரு பெண்ணை கொலைசெய்து நகைகளை திருடிச்சென்ற சம்பவத்தில் குற்றவாளிகளை பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்த மறுநாளே மறுபடியும் வீடு புகுந்து நகையை திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


பட்டுக்கோட்டை பெரியகடைத்தெரு பகுதியில் செல்வம் பிராண்ட் அரிசி கடை நடத்திவருபவர் சுப்பையன் மகன் திருச்செந்தில் (35). இவர் கடந்த ஒன்றரை ஆண்டாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே தெருவில் உள்ள காலனி விட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறைக்காக வெளியூர் சென்ற நிலையில் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் 'ஏசி' ரூமில் கதவைபூட்டிகொண்டு திருச்செந்தில் மட்டும் தூங்கிக்கொண்டு இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்டு வீட்டின் பிரதான கதவின் பூட்டை திறந்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 12 பவுன் நகை, ஐந்தாயிரம் பணம், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பட்டு சேலைகளை திருடிக்கொண்டிருந்த போது, பாத்ரூம் செல்வதற்காக வெளியே வந்த திருச்செந்திலை பார்த்ததும் அவரை தள்ளிவிட்டு தப்பிஓடிவிட்டான். தகவலறிந்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன், தஞ்சையில் இருந்த மோப்ப நாய் மற்றும் தடயஅறிவியல் துறையினரை வரவழைத்து விசாரணை செய்து வருகிறார். இப்பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் எப்போது? என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

0 comments: