நித்தியானந்தா முன்ஜாமீன் மனு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாமியார் நித்தியானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பாலியல் புகார் தொடர்பாக சாமியார் நித்தியானந்தாவை பெங்களூரு சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ராம்நகர் கிளைச் சிறையில் உள்ளார். புதுச்சேரியில் உள்ள வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவை புதுச்சேரிக்கு கொண்டு வர புதுச்சேரி உருளையன் பேட்டை போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


புதுச்சேரி போலீசாரின் கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் நித்தியானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் முன்ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கர்ணன் முன்னிலையில் சாமியார் நித்தியானந்தாவின் முன்ஜாமீன் மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

0 comments: