கோலாலம்பூரில் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சென்னையில் செய்தியாளர்களிடம்,

’’கடந்த பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7 ந் தேதிகளில் கோவையில் எனது தலைமையில் நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதற்காக உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோலாம்பூரில் தொடங்கப்பட்டது.

இங்கு, உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பது குறித்தும், ஈழத்தமிழர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட உள்ளது. வரும் 2012 ம் ஆண்டு 2 வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோலாலம்பூரில் நடத்தப்படும்.

கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் கொத்து குண்டுகளால் மறைந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் 12 ந் தேதி முதல் 18 ந் தேதி வரை மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments: