தஞ்சையில் இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சை வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 23 ஆயிரம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (14ம்தேதி) தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் வெளியிடப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வு 22ம்தேதி வரை நடந்தது. இதில் தஞ்சை வருவாய் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 985 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (14ம்தேதி) காலை 9 மணிக்கு தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் வெளியிடப்படும்.மேலும் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விளம்பர பலகையில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: