தினமும் யோகா செய்தால் பாடம் மனதில் பதியும் சொல்கிறார் வணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி

'பள்ளியில் தினமும் அரைமணி நேரம் யோகாவிற்கு பிறகு தான், வகுப்புகள் தொடங்கும். அந்த 'மெடிடேசன்' தான், படித்த பாடங்களை நினைவில் வைத்து கொள்ள உதவியாக இருந்தது' என, மாநில அளவில் வணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி ஏக்ன பிரியா கூறினார்.சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏக்ன பிரியா. இவர், பிளஸ் 2 தேர்வில் 1,183 மதிப்பெண்கள் பெற்றார். வணிகவியல் பாடப்பிரிவில் 200 மதிப்பெண்கள் பெற்ற அவர், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அவரது மதிப்பெண் விவரம்:பிரெஞ்சு 192, ஆங்கிலம் 192, பொருளியல் 199, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200.இதுகுறித்து அவர் கூறியதாவது:பள்ளிக்கு காலையில் சென்றவுடன், தினமும் அரைமணி நேரம் யோகா பயிற்சி கொடுக்கப்படும்.படித்த பாடங்களை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ள, அப்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருந்தது.

0 comments: