ஓமன் நாட்டிலிருந்து 2,600 டன் யூரியா கும்பகோணம் வரவழைப்பு

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கோடை மற்றும் குறுவை சாகுபடிக்காக ஓமன் நாட்டில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் யூரியா ரயில் மூலம் வரவழைக் கப்பட்டுள்ளது.தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு கோடை நெல் சாகுபடி நடந்து வருகிறது. அதேபோல குறுவை சாகுபடிக்கென நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.கோடை மற்றும் குறுவை நெல் சாகுபடி தேவைக்கென ஓமன் நாட்டில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 2 ஆயிரத்து 640 டன் யூரியா வரவழைக்கப் பட்டது. பின்னர் 42 ரயில் வேகன்கள் மூலம் கும்பகோணம் வந்தடைந்தது.யூரியா மூட்டைகளை தஞ்சை மாவட்ட கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலர் சேகர் மற்றும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தாலுகாக்களில் உள்ள 120 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 170 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 comments: