கலந்தர் மதீனா கடைக்கு சீல் வைப்பு

வீடு கட்டுவதற்கான அனுமதியை வாங்கி விட்டு பிரமாண்டமான ஜவுளிக் கடையை கட்டிய சென்னை கலந்தர் மதீனா ஜவுளிக் கடைக்கு இன்று சென்னை பெருநகரவளர்ச்சிக் குழும அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.

சென்னை தி.நகரில் கலந்தர் மதீனா ஜவுளிக்கடை உள்ளது. திறந்த வேகத்தில் பிரபலமாகி விட்ட இந்த கடைக்கு பெருமளவிலான வாடிக்கையாளர்கள் வந்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை இங்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதன் பின்னர் ஜவுளிக்கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டுவதற்காகவே அனுமதி வாங்கப்பட்டிருந்தது.

ஆனால் வீடு கட்டாமல் பிரமாண்ட ஜவுளிக் கடையை கட்டியுள்ளனர். இதனால்தான் கடை சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.வீடு கட்ட அனுமதி வாங்கி விட்டு பிரமாண்ட கடை எழுப்பப்பட்ட விவகாரம் தி.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: