இங்கிலாந்து பிரதமராகிறார் டேவிட் கேமரூன்

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெளன் நேற்றிரவு தனது பதவியை ராஜிநாமா செய்தார்.கடந்த 6ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது.இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க் கட்சியான கன்சர்வேடிங் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது.

கார்டன் பிரவுன் தலைமையிலான தொழிலாளர் கட்சி இரண்டாவது இடத்தையும், லிபரல் ஜனநாயகக் கட்சி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்க கார்டன் பிரவுன் முயன்றார்.

ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.இதைத் தொடர்ந்து கார்டன் பிரவுன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அரசியலில் இருந்தே ஓய்வு பெறப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.இதையடுத்து கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கின்றன.கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இதன் மூலம் அக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைக்கின்றன. ஆனால், இந்தக் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது முக்கிய அமைச்சர் பதவிகளுக்கு இவர்களிடையே கடும் மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
http://WWW.ADIRAIDAILYNEWS.BLOGSPOT.COM

0 comments: