பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் சண்முகம் பாராட்டி பரிசளித்தார்.தஞ்சை மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

வெற்றி பெற்றோரை கலெக்டர் சண்முகம் பாராட்டினார். தேனா வங்கி பரிசுதஞ்சை தேனா வங்கி சார்பில் கிளை மேலாளர் தமிழ்மணி மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் முதலிடம் பெற்ற பாரதிராஜாவுக்கு ரூபாய் 5 ஆயிரம், 2ம் இடம் பெற்ற பவித்ராவுக்கு ரூபாய் 3 ஆயிரம், 3ம் இடம் பெற்ற ஜனனி மற்றும் ராகிலாபிரவீன் ஆகியோருக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் பரிசு வழங்கினர்.


இந்த ரொக்கப் பரிசை கலெக்டர் சண்முகம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதையடுத்து அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம், 2ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் 2 ஆயிரம், 3ம் இடம் பெற்றவருக்கு ரூபாய் ஆயிரம் வங்கி சார்பில் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரும் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments: