வரும் 17ம் தேதி துக்கநாள்: இலங்கையில் அழைப்பு

தமிழர்கள் அனைவரும், வரும் 17ம் தேதியை பேரழிவு துக்கநாளாக கடைப்பிடிக்க வேண்டும்' என இலங்கை தமிழ் தேசிய கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தமிழ் தேசிய கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:இலங்கையில் கடந்தாண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். போரில் தங்களுக்கு கிடைத்த வெற்றியை, சிறப்பாக கொண்டாடும் வகையில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு, இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதே நேரத்தில், போரில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் 17ம் தேதியை பேரழிவு துக்க நாளாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும். வரும் 17ம் தேதி காலை மவுன அஞ்சலி செலுத்தும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: