மே12க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 12ம் தேதிக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்தன. ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை, மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தபடி உள்ளனர். நாளை முடிவுகள் வெளியாகலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது 12ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: