நாகூர் தர்கா மினராக்களில் கொடிமரம் ஏற்றம்

நாகூர் ஆண்டவர் தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா தொடக்கமாக நேற்று காலை 5.15 மணியளவில் தர்காவின் 5 மினராக்களில் பாய்மரம் எனும் கொடி மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நாகூர் ஆண்டவர் தர்கா மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்þறும் அனைத்து சமுதாய மக்களுக்கும் வந்து ஆண்டவர் தர்காவில் வழிபாடு செய்கின்றனர்.இங்கு ஆண்டுதோறும் கந்தூரி திருவிழா நடந்தது. இந்தாண்டு விழா நாளை (15ம் தேதி) இரவு 8.30 மணிக்கு புனித கொடியேற்றத்துடன் தொடங்கி 28ம் தேதி வரை நடக்கிறது.

இதை ஒட்டி நாளை இரவு 8.30 மணிக்கு 5 மனோராக்களில் புனித கொடியேற்றம், 22ம் தேதி இரவு வாணவேடிக்கை, 23ம் தேதி இரவு 10 மணிக்கு பீர் வைக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 24ம் தேதி இரவு தாபூத்து எனும் சந்தனக்கூடு நாகையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மறுநாள் 25ம் தேதி அதிகாலை ஹஜரத்து ஆண்டவர் ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு பீர் ஏகுதல், 28ம் தேதி இரவு 8.30 மணிக்கு குர் ஆன்ஷரீபு ஹதியா செய்து கந்தூரி விழா கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதை ஒட்டி நேற்று காலை 5.15 மணிக்கு தர்காவின் 5 மினராக்களில் பாய்மரம் எனும் கொடிமரம் ஏற்றப்பட்டது.இதில் தர்கா பரம்பரை டிரஸ்டி முகமது கலிபா சாகிப் மற்றும் தர்கா அறங்காவலர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை மாநிலத்தலைவர் சச்சா முபாரக், பரம்பரை நாட்டாண்மைக்காரர்களான போர்டு ஆப் டிரஸ்டிகள் கலந்து கொண்டனர்.

0 comments: