சென்னைக்கு வருகிறது ஆபத்து!

சென்னையில் இயற்கை மற்றும் ரீசைக்கிள் எனப்படும் மறுசுழற்சி மின்சக்தி பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராபர்ட் சவான் என்ற விஞ்ஞானி இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆராய்ச்சியாளரும், சுற்றுசூழல் தொடர்பாக ஆய்வு நடத்தி வருபவருமாவார். ஐஸ்மேன் என்ற பட்டபெயரினால் அழைக்கப்படும் இவர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது பூமி யின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் உள்ள பனிமலைகள், பாறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். மைனஸ் 73 டிகிரி வெப்ப நிலையிலும் ஆய்வு நடத்தி இருக்கிறேன். இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதை காணமுடிகிறது. அதில் அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் உலகெங்கும் கடல் மட்டம் பெருமளவு உயரும் நிலை உருவாகி உள்ளது. அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இதே போன்று தொடர்ந்தால் இன்னும் 80 ஆண்டுகளில் சென்னை நகரம் கடலில் மூழ்கி விடும். நாம் உபயோகப்படுத்தும் பெட்ரோல் வாகனங்களான மோட்டார் சைக்கிள் கார்கள் போன்றவை வெளியேற்றும் புகை, அனல் மின் நிலையம் வெளியிடும் புகையும்தான் இதற்கு காரணம். அவை இயற்கை பாதுகாப்பை அழித்து அண்டார்டிகாவை உருக வைத்து கொண்டிருக்கிறது. இதை நாம் நிறுத்தியாக வேண்டும் என்று ராபர்ட் சவான் கூறியுள்ளார்.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: