lமாபெரும் இலவச ஹோமியோ மருத்துவ முகாம் !

கடந்த (19.09.2010)காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா சங்கத்தில் நடைப்பெற்றது இதை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் PS ஹமீத் தலைமை வகித்தார் .இந்த முகாமை பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் NR ரங்கராஜன் துவக்கி வைத்தார் . இந்த முகாமில் உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்ட வியாதியஸ்தர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன .இந்த முகாமில் 300 க்கும் மேற்ப்பட்ட பயானாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் மன்ற தலைவர் MMS அப்துல் வகாப் ,நகர முஸ்லிம் லீக் தலைவர் KK .ஹாஜா நஜ்முதீன் ,நகர முன்னாள் செயலாளர் Dr ஹாஜி MA முகமத்ஸாலிஹ். பொருளாளர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் வக்கீல் A முனாப் BABL , நகர இ அணி தலைவர் . MA ஷாகுல் ஹமீத், நகர மாணவர் அணி அமைப்பாளர் இதிரிஸ் அஹமது , மாவட்ட பிரதிநிதி MR ஜமால் முகம்மத் .உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பாக வழிநடத்தினர் .

முகாமில் பணியாற்றிய ஸ்ரீ ஜெயேந்திராள் ஜனகல்யான் ஹோமியோ மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .

இம்முகாமில் சகோதரர் மகிழங்கோட்டை மாரிமுத்து அவர்கள் தானாக முன்வந்து இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி தனது சமய நல்லிணக்கத்தை வெளிக்காட்டினார் .

இந்த முகாமை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் .

படம் :ஜேப்பி

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கிய பிச்சைக்காரர்

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் பிச்சைக்காரர் ஒருவர் தங்கியிருந்தார். வளைகுடா நாடுகளில் பிச்சை எடுக்கும் தொழில் மிகவும் பரபரப்பாக நடை பெற்று வருகிறது. சுற்றுலா விசாவில் வரும் உடல் ஊன முற்றவர்கள் மற்றும் சிலர் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். ஏனெனில் வசதி படைத்த இந்த நாடுகளில் பிச்சைக்காரர்களுக்கு தாரளமாக பணம் கிடைக்கிறது.

எனவே, இங்கு அதிக அளவில் குவிகின்றனர். இந்த நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி துபாய் நாட்டில் ரோட்டில் சுற்றித்திரிந்த 360 பிச்சைக்காரர்களை அந்நாட்டு சுற்றுலா துறை கைது செய்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரு நபர் துபாயில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. இது விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

பிச்சை எடுப்பதன் மூலம் தனக்கு அதிக அளவில் பணம் கிடைப்பதால் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாக அவர் கூறினார். இந்த தகவலை துபாய் சுற்றுலா பாதுகாப்பு துறை இயக்குனர் மேஜர் முகமது ரஷீத் அல் முனகரி தெரிவித்தார்.

பிச்சை எடுப்பதற்காக தற்போது 5-வது தடவையாக அங்கு சுற்றுலா விசாவில் வந்திருப்பதாக உடல் உறுப்பை இழந்த பிச்சைக்காரர் ஒருவர் கூறினார். ஆனால், அவர்களின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

ரமலான் பண்டிகையின் போது மசூதிக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்.

பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா

தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழாவையொட்டி தஞ்சையில் வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழாவையொட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை பெரியகோவில் மாதிரி வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி அரங்கம், பெரியகோவிலில் கருத்தரங்கம், தஞ்சையில் 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை செயலாளர் அசோக்வரதன் ஷெட்டி, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம், சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு, ,பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர்கள் கருணாகரன், மூர்த்தி, கலெக்டர் சண்முகம், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வி சிவஞானம், மற்றும அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.


விழா பற்றி கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம். வருகிற 24-ந்தேதி தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி தொடங்குகிறது. மேலும் தஞ்சையில் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 இடங்களில் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-


பெரியகோவில் 1000-வது ஆண்டு விழா கண்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி ¢உள்ளார். சோழர்களின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெறும். மேலும் சோழர்களின் ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலையை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும்.


ராஜராஜனின் சிலை குஜராத்தில் உள்ள மியூசியத்தில் உள்ளது. இந்த சிலையை மீட்க சுற்றுலா துறை செயலாளர், தொல்லியல்துறை செயலாளர், குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் குஜராத் சென்று பேச்சு நடத்தினார்கள். அவர்கள் இது பற்றி ஆ¢ய்வு செய்து தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

ஜமாத் தலைவர் உள்பட 2 பேர் சுட்டு கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (வயது55).
பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குத்புதீனுக்கும், இதயதுல்லாவுக்கும், தொழுகை நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது சம்பந்தமாக விசாரிக்க குத்புதீன் உறவினர் திருவிடைமருதூர் அருகேயுள்ள திருமங்கலகுடியை சேர்ந்த ஹாஜ்முகமது(40). தனது ஆதரவாளர்கள் சுமார் 15 பேருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருவிடைச்சேரிக்கு வந்தார். அப்போது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயிலுக்கும் ஹாஜ் முகமதுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த ஹாஜ் முகமது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயில், மற்றும் அருகே நின்ற அஜீத் முகமது ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் திருவிடைச்சேரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே திருமங்கலகுடியில், உள்ள ஹாஜ் முகமது வீட்டில் போலீசார் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொலையாளி ஹாஜ் முகமது, நேற்று, சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஈசுவரமூர்ததி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் பெயர் வருமாறு:-
1. முகமது குத்புதீன், 2. அப்துல் மாலிக், 3. சேத்தப்பா, 4. சலாவுதீன், 5. முகமது இலியாஸ், 6. பசீர் மைதீன், 7. அப்துல் ரகீம், 8. ஜமீல், 9. முஜிபுர் ரகுமான், 10.முகமது அன்சாரி. 11. ஹபீப் ரகுமான், 12. அன்வர்தீன், 13. பசீர் முகமது, 14. ரவி, 15.ஜியாவுதீன்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஏதேனும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க இன்றும் போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.
திருவிடைச்சேரி பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கலெக்டர் சந்திரசேகரன் விசாரித்த காட்சி. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உள்ளார்.

வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்

மோட்டார் வாகனங்கள் உற்பத்தியில், சர்வதேச அளவில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனரக வாகனங்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் பீ.எஸ்.மீனா கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சியால், கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகனங்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு இதுவே முக்கிய காரணமாகும்.

கடந்த 2005-06ஆம் நிதி ஆண்டில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி 97.44 லட்சம் எண்ணிக்கைகளாக இருந்தது. இது, சென்ற 2009-10ஆம் நிதி ஆண்டில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து, 1.41 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது, 25 சதவீதம் (1.12 கோடி வாகனங்கள்) அதிகமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 32.4 சதவீதம் அதிகரித்துள்ளது.


அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்கள் விற்பனை நான்கு மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஆண்டிற்கு பயணிகள் வாகனங்கள் விற்பனை 90 லட்சம் எண்ணிக்கையாகவும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 3 கோடியாகவும் உயரும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஐந்து நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மீனா மேலும் தெரிவித்தார்.

ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை உயர்வு

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், ஏ.டி.எம். என்று அழைக்கப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களின் எண்ணிக்கை 53,906 ஆக இருந்தது. இது, சென்ற ஆகஸ்டு மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்து 61,702 ஆக உயர்ந்துள்ளது.


ஒரு வங்கியின் வாடிக்கையாளர், இதர வங்கிகளின் சூஏ.டி.எம்' மையங்களையும் பயன்படுத்தும் வகையில் விதிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி தளர்த்தியது.

இதனையடுத்து, இதர ஏ.டி.எம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சென்ற ஆகஸ்டு மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 10.18 கோடியாக உயர்ந்துள்ளது.


இது, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் 5.68 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், பல வங்கிகள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதிதாக கிளைகளை தொடங்குவதுடன், ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகின்றன.

நன்றி : நக்கீரன்


நீடாமங்கலத்தில் நின்று, சென்ற நாகூர் - கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்

நாகூரில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் நீடாமங்லத்தில் நின்று சென்னை செல்லும் பயணிகளை ஏற்றி சென்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பங்கேற்று பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.நாகூரில் இருந்து சென்னைக்கு தினமும் கம்பன் எக்ஸ்பிரஸ் சென்று வருகிறது. நீடாமங்கலம், மன்னார்குடி போன்ற பெரிய நகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னை செல்ல தஞ்சை சென்று பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.


நேற்று முதல் அந்த நிலை மாறி ரயில்வே முன்பதிவும், சென்னை செல்ல நீடாமங்கலத்திலேயே பயணம் செய்யும் வசதியும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் தளிக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்றும், தளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக நீடாமங்கலம் வரை செல்லும் அரசு பஸ் ஒன்றையும் முன்னார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.நேற்று காலையில் அந்த பஸ்ஸில் அவர் நீடாமங்கலத்தில் இருந்து தளிக்கோட்டைக்கு பயணம் செய்தார்.

முத்துப்பேட்டையில் செப். 18-ல் விநாயகர் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் செப். 18-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.


விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனித்தனியே நடத்தப்பட்டது. இக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு குறித்து நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஊர்வலம் செல்லும் பாதை, எழுப்பப்படும் கோஷங்கள் குறித்து இருதரப்பிடமும் சுமூகமான கருத்துகள் கேட்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பிற்பகல் 4 மணிக்குள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாலை 6 மணிக்குள் பாமணி ஆற்றில் கரைக்க விழா ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஊர்வலம் நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டவுள்ளது. விழா நடைபெறும் போது நடமாடும் மருத்துவக் குழுக்கள் உடன் செல்லவும், அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மூர்த்தி பேசியது:


கடந்த காலங்களில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலங்களின் போது நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 600 காவலர்கள் நிகழாண்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். தங்கவேல், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் துரைராஜ், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், இந்து அமைப்புகள் சார்பில் முருகானந்தம், கண்ணன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப், அகமது பாசித், முகமது இப்ராஹீம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு விருது

பொது மக்களின் குறைகளை சிறப்பான வகையில் தீர்வு காண்பதை பாராட்டி, சென்னை மாநகராட்சிக்கு "ஸ்காட்ச்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது,'' என, சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்களின் குறைகள் இணையதளம் மூலம் பதிவு செய்து தீர்வு காண 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்க 97899-51111 என்ற எண்ணும் உள்ளது.மேலும், www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளத்தை பயன்படுத்தியும் பொதுமக்களின் குறைகள் உடனே தீர்க்கப்படுகிறது.குப்பைகள் அகற்றுதல், தெரு நாய்கள் பிடித்தல், கட்டட இடிபாடுகளை அகற்றுதல், சொத்து வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், அமரர் ஊர்திகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பெறுதல், தெருவிளக்கு எரியாதது தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவை சரி செய்யப்படுகின்றன.இந்த சிறப்பான பணிக்காக, அரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் (ண்டுணிஞிட) நிறுவனம், சென்னை மாநகராட்சிக்கு 2010ம் ஆண்டிற்கான "ஸ்காட்ச்' விருதை வழங்க தேர்வு செய்துள்ளது. வரும் 22ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

20,000 தமிழ் இளைஞர்களை காணவில்லை!

இலங்கையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக, அந்நாட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற விடுதலைபுலிகளுடனான இறுதிப் போரின்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அமைப்புகள் ராஜபக்சேவின் கைக்கூலிகளாக மாறி வருகின்றன. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. தற்போது இலங்கையில் போர் முடிந்த பின்னர் தமிழர் பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்

தமி‌ழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவா‌ய்ப்பு அலுவலகங்களையும் வலைப்பின்னல் மூலம் ஒருங்கிணைத்து வேலைவா‌ய்ப்பு பதிவுகளை ஆன்லைன் மூலம் பதிவு செ‌ய்து கொள்ளும் வசதியினையும், எம்பவர் என்ற புதிய இணையதளத்தினையும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலஇதுவரவேலைவாய்ப்பஅலுவலகங்களுக்கநேரிலசென்றுதானகல்விததகுதியைபபதிவசெய்முடியுமஎன்நிலஇருந்தவந்தது. தற்போதவேலைவாய்ப்புக்காபதிவசெய்தல், புதுப்பித்தலபோன்அனைத்துபபணிகளையுமவீட்டிலிருந்தபடியஆன்லைனிலசெய்தகொள்முடியும்.

இதற்காவேலைவாய்ப்புத்துறதனி இணையதளத்தஉருவாக்கியுள்ளது. இந்இணைதளத்ததுணமுதலமை‌ச்சரு.க.ஸ்டாலினஇன்றதொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கதொழிலாளரநலத்துறஅமைச்சர் த.ோ. அன்பரசனதலைமவகித்தார்.

ஏற்கனவவேலவாய்ப்பஅலுவலகங்களிலபதிவசெய்தவர்கள், இந்இணைதளத்திலதங்களதபதிவஎண்ணஉள்ளிட்டதங்களதகல்வி விவரங்களசரிபார்த்துககொள்முடியும். இதற்கமூன்றமாகாஅவகாசமவழங்கப்பட்டிருக்கிறது. பதிவிலமாறுபாடஏதேனுமஇருப்பினஅதனஉரிசான்றிதழ்களுடனவேலைவாய்ப்பகத்தநேரிலஅணுகி சரிபார்த்துககொள்ளலாம்.

புதிதாபதிவசெய்தகொள்விரும்புவோரதங்களதகல்விததகுதி, பிறப்பு, ஜாதிசசான்றிதழ்களஸ்கேனசெய்தஇந்இணையதளத்திலபதிவேற்றமசெய்வேண்டும். இணையதமுகவரி www.tnvelaivaaippu.gov.in

ஆன்லைனிலபதிவசெய்வதஎப்படி: இணையதளத்திலுள்படிவத்திலவிவரங்களநிரப்பி சான்றிதழ்களஸ்கேனசெய்தபடிவத்திலவிண்ணப்பித்தவுடனஒரதற்காலிபயனாளி அடையாளமமற்றுமஏற்புச்சொலவரும். தங்களவிண்ணப்பத்தினவிவரங்களசரியானவஎனில் 7 நாட்களுக்குளவிண்ணப்பமவேலைவாய்ப்பஅலுவலகத்திலஏற்கப்படும். பதிவஅடையாஅட்டையதாங்களஉருவாக்கி, தாங்களஅச்சிட்டவெளியஎடுத்துககொள்ளலாம்.

கூடுதலபதிவசெய்வதஎப்படி: ஆன்லைனகூடுதலதகுதிகளபகுதியகிளிகசெய்வேண்டும். தங்களகோரிக்கையவேலைவாய்ப்பஅலுவலகமஏற்றபினபுதிஅடையாஅட்டையஎடுக்கலாம்.

ஆன்லைனிலபுதுப்பிக்இயலுமா: ஆம். ஆன்லைனிலபுதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கஒரமுறபதிவாமாதத்திலுமதொடர்ந்தவருமஇரமாதங்களுக்குள்ளுமபுதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்காலத்தபுதுப்பிக்காதவர்கள் 18 மாதசசலுகையிலபுதுப்பிக்விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பமஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதஎப்படி அறிவது: தற்காலிகபபதிவஎண்ணை "பயன்படுத்துவோரஅடையாளமாகவும்" (username), பிறந்தேதியை, ஏற்புசசொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவினநிலையஅறியலாம்.

ஆன்லைனிலமுகவரி மாற்முடியுமா: ஆம். பதிவசெய்தவர்களதாங்களமுகவரியமாற்றிககொள்ளலாம்.

ஆன்லைனிலமுன்னுரிமைசசான்றினை (priority certificate) பதிஇயலுமா: முன்னுரிமைசசான்றுகள், எடுத்துக்காட்டாக, நிஎடுப்பபாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றிலமெய்த்தன்மஉறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகமுன்னுரிமைசசான்றுகளையுமஆன்லைனிலபதிஇயலாது. சான்றினநகல்களவிண்ணப்பத்துடனஅஞ்சலில/நேரிலவேலைவாய்ப்பகத்திற்கஅனுப்வேண்டும்.

இத்தளத்திலபதிவசெய்தகுதியானவரயார்: இத்தளத்திலதமிழ்நாட்டிலவசித்தவருபவரபதியலாம்.

இத்தளமமூலமபணி நாடுவோர்களுக்கஉள்வசதிகளயாவை: நேரிலபதிவு, நேரிலபதிவபுதுப்பித்தல், தகுதிகளஅதிகப்படுத்தல், அனுப்பப்பட்பதிவுக்காபதிவட்டஎடுத்தல், வேலைவாய்ப்பவிவரங்கள், பல்வேறதகுதிகளுக்காபரிந்துரவரம்புகளஅளித்தலஆகியவஉள்ளன.
நன்றி :வெப் துன்யா

பேச்சுவார்த்தைக்கு தயார்!

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எந்த அமைப்பினருடனும் அல்லது தனிநபர் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் வன்முறைச் சம்பவங்கள் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பாக விவாதிக்க இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மன்மோகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வன்முறையாளர்கள், போலீசார், பாதுகாப்புப் படையினரால் பலர் உயிரிழந்தது குறித்தும், காயமடைந்தது குறித்தும் கவலை தெரிவித்த பிரதமர், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், ஆனால் வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் இல்லாத சூழ்நிலையில் பேசுவது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதுதான் உண்மை என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மலேசியாவில் கொல்லப்பட்டார் சென்னை பைனான்சியர்

சென்னையில் சினிமா பைனான்சியர் முத்துராஜா மலேசியாவில் கொல்லப்பட்டார். ஜனவரியில் மலேசியா சென்ற முத்துராஜா காணாமல் போன வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கணவர் திரும்பாததை அடுத்து மனைவி உஷாராணி மலேசிய போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் முத்துராஜாவை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று நண்பர்கள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து முத்துராஜா கொலை வழக்கில் மலேசியாவில் வழக்கறிஞர்கள் 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட வக்கீல்கள் சுரேந்திரன், பத்மநாபன் இருவரும் சகோதரர்கள் ஆவர். எனவே இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே மலேசியாவில் 4 பேரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை

மதுரை புதிய விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கவேண்டும் என்று மத்திய அமை‌ச்ச‌ர் மு.க.அழகிரி ‌விடு‌த்த கோரிக்கையை அடு‌த்து விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவி‌த்துள்ளா‌ர்.


மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை நீடிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 128 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக முனையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்பிலான இந்த கட்டிடம் 17 ஆயிரத்து 700 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது. இந்த தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான நிலைய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.


சிங்கப்பூர், இலங்கை, துபாய் போன்ற அய‌‌ல்நாடுகளுக்கு நேரடியாக மதுரையில் இருந்து செல்வதற்கு விமான சேவை இல்லை. சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு சென்று தான் அந்த நாடுகளுக்கு செல்லவேண்டி உள்ளது. அவ்வாறு இல்லாமல் நேரடியாக விமான சேவை இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மிக விரைவில், மதுரை விமான நிலையத்தில் இருந்து அய‌ல்நாட்டிற்கு விமானம் இயக்கப்படும். அது பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்குகள் போக்குவரத்தும் தொடங்கப்படும் எ‌ன்று ‌பிரபு‌ல் ப‌ட்டே‌ல் தெரிவித்துள்ளார்.

கலைஞர் வீட்டுவசதி திட்டம்: ஜனவரி 31-க்குள் வீடுகள் ஒப்படைப்பு


கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியது:

குடிசைகளை அகற்றி, கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் உலக அளவில் பாராட்டப்படுகிறது. 6 ஆண்டு கால திட்டமான இதன் மூலம், மொத்தத்தில் 21 லட்சம் பேர் பயன் அடையவுள்ளனர். முதற்கட்டமாக 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.

வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று 6-வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்பார். எனவே, அடுத்த 6 ஆண்டு காலத்துக்குள் கலைஞர் வீட்டு வசதித் திட்ட வீடுகள் கட்டும் பணி முடிóவடையும்.சீர்திருத்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் 1967-க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் அங்கீகாரம் பெறாத நிலை இருந்தது.

அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், இதற்கான சட்டத்தை இயற்றினார். அன்று முதல் தமிழை செம்மொழியாக்கியது வரை திமுக அரசுதான் அனைத்தையும் செய்துள்ளது.தேர்தல் அறிக்கைகளை புத்தகமாக்கி, திமுக வெளியிட்டது. தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளர்கள் அல்ல. திமுகவின் தேர்தல் வாக்குறுதி புத்தகம்தான் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டினார் என்றார்.