20,000 தமிழ் இளைஞர்களை காணவில்லை!

இலங்கையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக, அந்நாட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற விடுதலைபுலிகளுடனான இறுதிப் போரின்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் செய்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழ் அமைப்புகள் ராஜபக்சேவின் கைக்கூலிகளாக மாறி வருகின்றன. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. தற்போது இலங்கையில் போர் முடிந்த பின்னர் தமிழர் பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் போய் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 comments: