அனாதை குழந்தைகளுக்கு ரூ.47 லட்சம் நன்கொடை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது கணவர் பிராட் பிட் ஆகியோர் அனாதை குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்துக்கு ரூ.47 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர். அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எஸ்ஓஎஸ் அநாதை குழந்தைகள் தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு இது உதவி செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இந்த நிறுவனத்துக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது கணவர் பிராட் பிட் ஆகியோர் ரூ.47 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர். ÔÔஅனாதை மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு எஸ்ஓஎஸ் நிறுவனம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
அவர்களது சிறந்த சேவையில் பங்கு கொள்வதற்காக இந்த நிதியுதவியை வழங்குகிறோம்ÕÕ என ஜோலி தெரிவித்தார். ÔÔஇந்த விடுமுறை சீசனை நாம் எல்லோரும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம்.
இந்த நேரத்தில் உறவுகளை இழந்து தவிக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறதுÕÕ என பிராட் தெரிவித்தார்.

0 comments: