சாமியாரை கைது செய்ய வேண்டும்

தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்பவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கொடுத்த மனுவில், ‘எனக்கு வேலை தருவதாக கூறி, காபியில் மயக்க மருந்து கொடுத்து நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் பலாத்காரம் செய்து விட்டார்’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரிக்க சாமியாரை போலீசார் அழைத்தனர்.

ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார்.கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ஹேமலதா, நிருபர்களிடம் கூறியதாவது: கோர்ட் உத்தரவுபடி 18, 19ம் தேதிகளில் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகுதான் முடிவு தெரியும். உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, படிப்படியாக விசாரணை நடத்தி வருவதாக கூறுகிறார். போலீசார் என்னிடம் உடனே விசாரணை நடத்தினர்.

ஆனால் சாமியாரிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கை திசை திருப்ப சாமியார் முயற்சிக்கிறார். அவரை பிடித்து விரைவில் விசாரணை நடத்தி, கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு ஹேமலதா கூறினார்.

0 comments: