ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா திருமணம்


பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது நீண்ட நாள் காதலரான ராஜ் குந்த்ராவை நவம்பர் 22ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் 24ஆம் தேதி மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள கன்டாலா பகுதியில் ஷில்பாவின் நண்பர் கிரண் பாவாவின் பங்களாவில் ஷில்பா-குந்த்ரா திருமணம் நடைபெற உள்ளது. பஞ்சாபி மற்றும் தென்னிந்திய முறையில் திருமணம் நடைபெறும் என ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் வாழ்ந்து வரும் அயல்நாட்டு வாழ் இந்தியரான குந்த்ரா, ஷில்பாவுடன் திருமணம் முடிந்த பின்னர் மும்பையிலேயே குடியிருப்பதற்காக ஜூஹூ பகுதியில் புதிய பங்களா ஒன்றை சமீபத்தில் விலைக்கு வாங்கியது நினைவில் கொள்ளத்தக்கது.ஷில்பா-குந்த்ரா திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் எனத் தகவல்கள்

0 comments: