ராஜிவ்காந்தி கொலை வழக்கு நாளை விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், நளினி உள்ளிட்ட 41 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலை மறைவு குற்றவாளிகள் என்று பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. மீதமுள்ளோரில் 26 பேர் மீதான வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டு 1998ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் தொடர்பாக மேல் விசாரணை நடத்த வேண்டும் என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், பல்நோக்கு புலனாய்வு குழுவிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் (முதலாவது கூடுதல் செஷன்ஸ்) விசாரணையில் உள்ளது. வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மன் தொடர்பான முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

0 comments: