முதலிரவில் மணமகன் தற்கொலை

சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (29). சென்னை நந்தனத்தில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பூர்ணிமாவுக்கும் நேற்று காலை ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது.

மணமக்கள் மணப்பெண் பூர்ணிமா வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று இரவு அவர்களுக்கு முதலிரவு நடந்தது.

இன்று அதிகாலை மணப்பெண் எழுந்து பார்த்தார். அப்போது தாமோதரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் வேட்டியில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து மணமகள் கதறினார்.

அவர் அறையை விட்டு வெளியே ஓடி வந்து உறவினர்களிடம் தெரிவித்தார். தாமோதரனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் தாமோதரனின் உடலை மணமகன் வீட்டிற்கு எடுத்து சென்றனர். திருமணம் ஆன முதல் நாள் இரவில் தாமோதரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணமகன் தாமோதரன் செல்போனை அவரது உறவினர்கள் எடுத்து பார்த்தனர்.

அதில் ஐலவ் யூ பூர்ணிமா. ஐ ஏம் சாரி... என டைப் அடித்து வைக்கப்பட்டு இருந்தது. அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது .

0 comments: