மன்னார்குடியில் இலங்கை வாலிபர் கைது!

மன்னார்குடியில் இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரித்ததில் தனது பெயர் முகமது ரிபாக்(26) எனவும், தான் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். இப்பகுதியில் இருந்த சைக்கிள் கடையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்துச் சென்றுவிட்டு, திருப்பி விடுகையில் கடைக்காரர் பணம் கேட்டதற்கு, அவரை மிரட்டி உள்ளான்.
முகமது ரிபாக்கின் நடவடிக்கையில் சந்தேகம் வரவே, அப்பகுதியினர் ரிபாக்கை போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவனிடம் இருந்த பையை சோதனையிட்ட போது, அதில் 18 பெயர்களில் 18 விதமான கிரடிட் கார்டுகளும், 5 ரேஷன் கார்டுகளும், 2 அடையாள அட்டைகளும் இருந்துள்ளன.

ரிபாக் ஏதாவது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவனா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: