மீனவர்கள் டெல்லியில் போராட்டம்

மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு புதிதாக கொண்டு வர முயலும் "மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 2009'ஐ வாபஸ் பெற வலியுறுத்தி வரும் 30ந் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் சங்கங்க ளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று சாந்தோமில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு பர்வத ராஜகுள மீனவர் சங்கத்தின் தலைவர் அப்பாராஜ், தமிழ்நாடு பரதர் நலப்பேரவை தலைவர் மைக்கேல் பர்னாண்டோ ஆகியோர் செய்தியாளர்களிம் பேசுகையில்,


மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 2009 சட்டத்தை எதிர்த்து மீனவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இச்சட்டத்தைக் கண்டிக்கும் வகையில் பல மாவட்டங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த மீனவர்கள் இந்த சட்ட முன்வடிவினை எதிர்த்தும், மீனவர் சமுதாய நலனை முன்னிட் டும் வரும் 30ந் தேதி (திங்கள்) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை புதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த இருக்கிறோம். இதில் தமிழகத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெறவில்லை என்றால், விசைப்படகு, நாட்டுப்படகு உள்ளிட்ட அனைத்து படகுகளையும் கடலில் நிறுத்தி வெளிநாட்டுக்கப்பலை செல்ல விடாமல் மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.


அதையும் மீறிஇச்சட்டம் வாபஸ் பெறவில்லை என்றால், மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

0 comments: