அகதிகளுக்கு இலவச கல்வி

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இன்று துணைவேந்தர் ஜி.திருவாசகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவில் வாழும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களில் கல்லூரி படிப்புக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் இலவச கல்வி அளிக்க சென்னை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் தொலைதூரக்கல்வி கல்வி திட்டத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். இந்த திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கும் திட்டத்திலும் இலங்கை தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

0 comments: