மாவீரர் தினம் !

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இலங்கை கடந்த தமிழ் ஈழ அரசுக்கான செயற்குழுத் தலைவர் ருத்திரகுமாரன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘’தமிழ் ஈழப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் லட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்.

மாவீரர்களின் தியாகமும், வீரமும் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும். நாடு கடந்த தமிழ் ஈழ அரசை வரும் புத்தாண்டில் உருவாக்கி, அதன் வழியே எங்கள் மாவீரர்களின் லட்சியங்களை நிறைவேற்ற, அவர்களது கனவுகளை நனவாக்க அனைவரும் உழைப்போம் என இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்’’என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comments:

kumar said...

romba mukkiyam....