கள்ள நோட்டு சிக்கினார் வாலிபர் !

சென்னை தியாகராயநகர் துரைசாமி ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு வெளி மாநில வாலிபர் ஒருவர் துணி வாங்கி சென்றார். துணிகளை வாங்கி விட்டு ரூ. 500 ஐ கடைக்காரரிடம் கொடுத்தார்.

அப்போது கடைக்காரருக்கு 500 ரூபாய் மீது சந்தேகம் ஏற்பட்டது. மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக கடைக்கு வந்து 500 ரூபாயை சோதனை செய்தனர். அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. உடனே அந்த வெளிமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் சாதிக் (29). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தது.


அங்கிருந்து கள்ள நோட்டுக்களை எடுத்து சென்னையில் புழக்கத்தில் விட்டேன். மேலும் அவனிடம் நடந்திய விசாரணையில், அபில் சாதிக் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அபில்சாதிக் வைத்திருந்த பையில் ரூ. 30 ஆயிரத்துக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள், மற்றும் ஒரிஜினல் ரூபாய் 4,300 இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 comments: