கரும்பு கொள்முதல் விலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இலவச டி.வி., வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. தமிழக விவசாய துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இவ்விழாவில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ’’கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக முதல்வர் கருணாநிதி தொடர்பு கொண்டு பேசினார். இந்த விஷயத்தில் தி.மு.க, எந்த நிலையை எடுப்பது என ஆலோசித்துள்ளார்.
கரும்பு கொள்முதல் நிர்ணய சட்டத்தை எதிர்க்கிறோம். நாங்கள் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் சபையில் எதிர்ப்பை காட்ட முடியாது . இது குறித்த பிரதமரிடம் கடிதம் மூலம் தெரிவிப்போம்’’ என்றார்.


0 comments: