செலவு ரூ.31 கோடி

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபை உயிருடன் பாதுகாக்க கடந்த ஒரு ஆண்டில் மகாராஷ்டிர அரசு ரூ.31 கோடி செலவு செய்துள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் பிடிபட்ட கசாபை பாதுகாக்க மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் சிறப்பு அறை கட்டப்பட்டது. இதற்கு மிகப் பெரும் தொகை செலவிடப்பட்டது.

வெடிகுண்டு லாரி மோதினாலும் சேதமடையாத வகையில் அறை உருவாக்கப்பட்டது. கசாபுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜே.ஜே. மருத்துவமனையிலும் பாதுகாப்பு அறை கட்டப்பட்டது. குண்டு துளைக்காத இந்த அறை கட்ட ரூ.1 கோடி செலவானது.

ஆனால், இதுவரை கசாப் இங்கு ஒருநாள்கூட தங்கியதில்லை. அவன் உடல்நிலை பாதிக்கும்போது சிறைக்கே டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 24 டாக்டர்கள் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

இதன்மூலம், தீவிரவாதி கசாபுக்காக மொத்தம் ரூ.31 கோடி செலவிடப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் தொடங்கிய கசாப் மீதான வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. இது முடிய இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என அரசு வக்கீல் உஜ்வல் நிகாம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் சவான் சூளுரை: மும்பை தீவிரவாத தாக்குதல், மும்பை புறநகர் ரயில்களில் 2006ல் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு இந்திய வர்த்தக சம்மேளனம் சார்பில் தெற்கு மும்பை சர்ச்கேட்டில் நினைவகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை முதல்வர் அசோக் சவான் நாட்டினார்.அப்போது, ‘‘மகாராஷ்டிராவில் இனிமேல் எப்படிப்பட்ட தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதை முறியடிக்க முழு அளவில் தயாராக உள்ளோம்.

இதற்கான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக டிரைடென்ட் ஓட்டலில் இருந்து கிர்காவ் சவுப்பாத்தி வரை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், மாநில அரசு புதிதாக உருவாக்கியுள்ள ‘போர்ஸ் ஒன்’ படை கமாண்டோக்களும், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களும் பங்கேற்றனர்’’ என்றார்

0 comments: