முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் மரணம் .

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் உச்சிகவுடர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த உச்சிகவுடர் கூடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சிறந்த முறையில் பணியாற்றி உள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

0 comments: