தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

நடக்கவிருக்கும் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் டிச.19 ந் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.


திமுக வேட்பாளர்களாக அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியிலும், கமலக்கண்ணன் வந்தவாசி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி அறிவித்திருந்தார்.


இதேபோல் அதிமுக வேட்பாளர்களாக அம்மன் நாராயணன் திருச்செந்தூர் தொகுதியிலும், முனுசாமி வந்தவாசி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.


இந்நிலையில் தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். கோமதி ஆ.கணேசன் திருச்செந்தூர் தொகுதியிலும், என்.ஜனார்த்தனன் வந்தவாசி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று இன்று அறிவித்தார்.

0 comments: