மார்ச் 1ல் பிளஸ்டூ தேர்வு தொடக்கம்- எஸ்.எஸ்.எல்.சிக்கு 10ம் தேதி முதல்

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 10ம் தேதி முதல் நடைபெறும்.


இதற்கான உத்தேசக் கால அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.


வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பிளஸ்டூ தேர்வும், ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்புத் தேர்வும் நடைபெறுவது வழக்கம்.


இந்த ஆண்டு இரு தேர்வுகளும் மார்ச் மாதத்திலேயே தொடங்கின.


அதேபோல அடுத்த ஆண்டு தேர்வும் மார்ச் மாதத்திலேயே தொடங்குகிறது.


அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி பிளஸ்டூ தேர்வு தொடங்கவுள்ளது. மார்ச் 10ம் தேதி எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இதற்கான கால அட்டவணை தயாராகியுள்ளது. இதை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி மாற்றங்கள் இருக்கிறதா என்பதை அறியவுள்னர். அதன் பின்னர் இறுதி தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

0 comments: