ஆஸ்கர் நாயகன் இசையில் ....

புகழ் பெற்ற கோவில்களுள் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டி உள்ளது. இக்கோவில் பற்றி புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள், பாடகர்- பாடகிகள் பலர் பாடல்கள் பாடி உள்ளனர்.

பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் ஏழுமலையான் பற்றி 5 பாடல்கள் பாடி இருந்தார். இன்னும் அவர் 2 பாடல்கள் பாட வேண்டி உள்ளது. அதன் பிறகு அதை ஒரு ஆல்பமாக வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏழுமலையான் பாடல்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார்.

அவர், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தமிழர் என்றாலும் அவர் மிகுந்த நாட்டுப்பற்று உடையவர்.அவரது இசையில் உருவான வந்தே மாதரம் பாடல் தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் பாடலாக உருவெடுத்துள்ளது.
ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர். ரகுமானிடம் ஏழுமலையான் பக்தி பாடல்களுக்கு இசையமைத்து தரும்படி கேட்க உள்ளோம். விரைவில் அவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று .தெரிவித்துள்ளார்.

0 comments: