திமுகவுக்கு ஆதரவு: ஏ.சி.சண்முகம்

வந்தவாசி, திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும் என கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.


ஆரணியில் ஜவுளி பூங்காவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையைவிட கூடுதலாக விலை அளிக்க மாநில அரசு விரும்பினால் அதனை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி புதிய மசோதா கொண்டுவர வேண்டும்.


நீதிக்கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் டிச.6 ல் ஆரணியில் நடக்கிறது. கூட்டத்தில் வந்தவாசி இடைத்தேர்தலில் கட்சியினர் பணி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.


மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மீன் பிடித் தொழிலுக்கு கொண்டு வந்த ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றார்.

0 comments: