ரயில் தடம் புரண்டு 39 பேர் பரிதாப பலி

தண்டவாளத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் அந்த வழியாக வந்த ரயில் சிக்கி நொறுங்கியது. 3 பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 39 பயணிகள் உயிர் இழந்தனர்.

95 பேர் படுகாயம் அடைந்தனர். ரஷ்யாவில் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவில் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வரை செல்லும் நிவா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நவ்கோரட் பகுதியில் அடர்ந்த காடு வழியாக சென்று கொண்டிருந்தது.உக்லோவ்கா என்ற நகர் அருகே வந்தபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு டமார் என்ற சத்தத்துடன் பயங்கரமான வெடித்தது. இதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டன.

அடர்ந்த காடு என்பதால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. மீட்பு குழுவினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மீட்பு குழுவினர் சென்றபோது பயணிகளின் உடல்கள் தண்டவாளத்தை விட்டு வெளியேயும், ரயில் பெட்டிகளுக்குள்ளும் சிதறிக் கிடந்தன.39 பயணிகள் உயிர் இழந்து இருப்பதாகவும். 95 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய நெருக்கடி கால அமைச்சர் ஷோய்கு கூறினார்.
தண்டவாளத்தில் குண்டு வெடித்ததற்கான தடயம் கிடைத்துள்ளது என்று ரஷ்ய ரயில்வே தலைவர் விலாடிமிர் யுகினின் கூறினார். இந்த சம்பவம் பற்றி முழு அளவில் விசாரணை நடத்துமாறு அதிபர் டிமித்ரி மேத்வதேவ் உத்தரவிட்டுள்ளார். நிவா எக்ஸ்பிரஸ் ஆடம்பர ரயில் ஆகும்.

0 comments: