சீமான் வெளிநாடுகள் செல்ல தடை வருமா?

மாவீரர் தினமான இன்று (நவம்பர் 27) உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.


அந்த வகையில் கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் அழைக்கப்பட்டிருந்தார்.


அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் தேதி கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ந்ச்சியில் சீமான் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.


இந்தக் கூட்டத்தில் சீமான் பேச்சு அரங்கம் முழுவதும் திரண்டு இருந்த தமிழர்களை கவர்ந்தது. கூட்டம் நடந்த மறுநாளான 26ஆம் தேதி காலை கனடாவில் உள்ள டொரொண்டாவில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது.


இந்நிலையில் அழைப்பின் பேரில், பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் ஆகியவற்றில் பங்குபற்றுவதற்காக கனடா சென்ற சீமான் கனடா போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின், டொரொண்டா விமான நிலையத்திலிருந்து தாமாகவே விரும்பி தமிழ்நாடு திரும்பியுள்ளார். சென்னை விமான நிலைத்தில் சீமானின் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க தயாராக உள்ளனர்.


கனடா போலீசார் சீமானை தமிழகத்துக்கு திருப்பி அனுப்பியதையடுத்து, இனி சீமான் வெளிநாடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டள்ளதாக தெரிகிறது.


இனி அவர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகள் செல்லும்போது, இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகள் சோதனையில் அவர் கனடா போலீசாரால் திருப்பி அனுப்பட்டதை சுட்டிக் காட்டப்பட்டு அவரது பயணம் தடைபடக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன

0 comments: