டிசம்பர் 6ல் ரயில் மறியல்: இந்து முன்னணி

முக்கிய நகரங்களில் டிசம்பர் 6ல் காவிக்கொடி ஏந்திக்கொண்டு இந்து முன்னணியினர் ரயில் மறியல் செய்ய இருப்பதாக மாநில அமைப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.


பாபர் மசூதி இடிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதன் தீர்ப்பு தாமதம் ஆவதற்கு காங்., ஆட்சி தான் காரணம். டிசம்பர் 6ல் தமிழகத்தில் போலீசாரால் ஏக கெடுபிடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.


டிசம்பர் 6 அன்று இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஏந்திக்கொண்டு முக்கிய நகரங்களில் ரயில் மறியலும், பிற ஊர்களில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம். லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது மத்திய அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது. இதற்கு பொறுப்பான அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும். ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க பூஜைக்குரிய கட்டணத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால் பக்தர்களை திரட்டி, கோயிலுக்குள் நுழைந்து நாங்களே பூஜை செய்து கொள்வோம். கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

0 comments: