சென்னை சுற்றுலா நட்பு ஆட்டோ வாகன ஓட்டுநர்களுக்கு அனுமதி

செ‌ன்னை‌யி‌ல் சு‌ற்றுலா ந‌ட்பு ஆ‌ட்டோ வாகன ஓ‌ட்டுந‌ர்களு‌க்கு த‌மிழக அரசு அனும‌தி அ‌ளி‌த்து ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்து‌ள்ளது.


சென்னை மாநகரில் இயங்கும், 39 சுற்றுலா நட்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்க
ு (Tourist Friendly Auto Drivers) நடைமுறையில் உள்ள தடை ஆணை, நிபந்தனைகளைத் தளர்த்தி ஆட்டோ ஓட்டுநர் அனுமதி ஆணை (Permit) வழங்குமாறு, சுற்றுலா பண்பாட்டுத் துறையின் கோரிக்கையின் பேரில் போக்குவரத்து ஆணையரஅரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.


இந்த 39 ஆட்டோ ஓட்டுநர்கள் நல்லமுறையில் பயிற்ச
ி பெற்றுள்ளார்கள் என்றும், கடந்த 11 மாதங்களாகத் தங்களது சுற்றுலா நட்பு ஆட்டவாகனம் மூலம் சிறப்பாகப் பணியாற்றி, சுற்றுலா பயணிகளிடம் நற்பெயரஎடுத்துள்ளதாகவும் அவர் தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தார்.


ஆட்டோ ர
ி‌க் ஷா அனுமதி ஆணை (Permit) மானியத் திட்டத்தின் ‌கீ‌ழ் அனுமதி வழங்க போதிய காலியிடம் இல்லாததால், மேற்காணும் 39 ஆட்டோ ரி‌க் ஷா ஓட்டுநர்களுக்கு மானியம் அல்லாத திட்டத்தின் கீ‌ழ் (Non Subsidy Scheme) பரிசீலனை செ‌ய்யலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.


போக்குவரத்து ஆணையரின் பரிந்துரையை அரசு ஏற்று, 39 சுற்றுலா நட்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு (
Tourist Friendly Auto Drivers) தற்போது நடைமுறையில் உள்ள தடை ஆணையில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி போன்ற சில நிபந்தனைகளை, அவைகளை நிறைவு செ‌ய்யாத விண்ணப்பதாரர்கள் சார்பாக தளர்த்தி, அரசு மானியம் அல்லாத ஆட்டோ ரி‌க் ஷா அனுமதி ஆணை (Permit under Non-subsidy Scheme) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

0 comments: