கவிஞர் சல்மாவின் துரித நடவடிக்கை

சேலம் மாவட்டம் குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்யப் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது.


சிறுமி கல்வி பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரின் மூலம் இத்தகவல் தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவி கவிஞர் சல்மா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியருக்கு, இக்குழந்தை திருமணம் பற்றிய முழு விபரத்தையும் கவிஞர் சல்மா தெரியப்படுத்தினார்.


ஆட்சியரின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமி தொடர்ந்து கல்வி பயில வழிவகை செய்யப்பட்டது.


இதுகுறித்து கவிஞர் சல்மா கூறுகையில், இப்பொழுது அந்த சிறுமி மகிழ்ச்சியாக பள்ளி சென்று வருகிறாள். தலைமை ஆசிரியரின் செயல் பாராட்டுக்குறியது. இதுபோன்ற ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் செயல்பட்டால், குழந்தை திருமணம் என்ற சட்ட விரோத செயல் நம் நாட்டைவிட்டே ஒழிக்கப்படும். பெண் கல்வியும் காப்பாற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

0 comments: